பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒன்றை எடுத்துக் கொண்டார். அந்தக் கூடை நிறைய ரொட்டிகள் இருந்தன. அவ்வளவு பெரிய கூடையை ஈசாப் தூக்கிக் கொண்டதும், மற்ற அடிமைகள் சிரித்தார்கள்.

“என்னப்பா இது ! கனமில்லாத சுமையாக வேண்டுமென்று கேட்டாய். இவ்வளவு பெரிய கூடையைத் தூக்கிக் கொண்டிருக்கிறாயே!” என்று கேட்டார்கள்.

ஈசாப் அப்போது எதுவும் கூறவில்லை.

ஆனால், ஈசாப் முட்டாளல்ல என்பதை அவருடைய நண்பர்கள் வெகு சீக்கிரத்திலே தெரிந்து

33