பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வட்டமாக ஒரு கோடு போடுவான். போட்டு விட்டு,“ இதைத் தாண்டி நீ போகக் கூடாது. போனால் ஆபத்து !” என்பான். இராமாயணத்தில்







இலக்குமணன் போட்ட கோட்டைத் தாண்டியதால்தானே சீதை இராவணனிடம் அகப்பட்டுக் கொண்டாள் ? அத்தக் கதை தாகூருக்குத் தெரியுமாதலால் பயந்துபோய் அந்தக் கோட்டுக்குள்ளே இருப்பார். அங்கிருந்தபடியே சுற்றிலும் உள்ள மரம் செடி கொடிகளையும், பறவைகளையும் பார்த்துப் பார்த்து ஏதாவது கற்பனை செய்து கொண்டிருப்பார். அதுவும் நன்மைக்குத்தான் !

ஒரு சமயம் ரமேசசந்திர தத்தர் என்பவர் வீட்டில் திருமணம் நடந்தது. அதற்கு ரவீந்திரர்

48