பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுபது வயதில் இனிய கதை தந்தவர்



சின்ட்ரல்லா மிகவும் நல்ல பெண். அவளுக்கு அம்மா இல்லை. அப்பா இரண்டாந்தாரம் கல்யாணம் செய்துகொண்டிருந்தார். அந்த மாற்றாந்தாய் மிகவும் பொல்லாதவள். அவளுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அம்மாவைப் போலவே அவர்களும் பொல்லாதவர்கள் ; பொறாமைக்காரிகள் !

சின்ட்ரல்லாவை ஒரு வேலைக்காரியைப் போலவே அவர்கள் நடத்திவந்தார்கள். அதி காலையில் எழுந்தால், இரவு வெகு நேரம்வரை வேலை இருந்து கொண்டேயிருக்கும். பம்பரம் போல் ஓடி ஆடி வேலை செய்வாள். சகோதரிகள்

620-4

53