பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

னாள். ஒரு பெரிய பூசனிக்காயைக் கொண்டு வந்து தேவதையின் முன்னால் வைத்தாள். தேவதை தன் கையிலிருந்த மந்திரக் கோலினால் அந்தப் பூசணிக்காயைத் தொட்டது. மறுவிநாடி பூசணிக்காய் ஓர் அருமையான கோச்சு வண்டியாக மாறிவிட்டது! கோச்சு வண்டிமட்டும் இருந்தால் போதுமா? அதை இழுத்துச் செல்லக் குதிரைகள் வேண்டாமா ? ooட்டுவதற்கு ஆட்கள் வேண்டாமா ?

அங்கே இருந்த எலிப் பொறியில் ஆறு சுண்டெலிகள் இருந்தன. அந்த ஆறு எலிகளையும் அழகிய குதிரைகளாக மாற்றிவிட்டது அத் தேவதை! பிறகு குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்த மூன்று எலிகளை கோச்சு வண்டிக்காரர்களாக மாற்றியது. ஒருவன் வண்டியை ஒட்டுவதற்கு; இருவர் பின்னால் காவலுக்கு!

சின்ட்ரல்லாவுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. உடனேயே அந்த வண்டியில் ஏறி அரண்மனைக்குச் செல்ல வேண்டும் என்று அவள் நினைத்தாள். ஆனால், நல்ல உடை வேண்டுமே !

“சின்ட்ரல்லா, எங்கே உன் கண்களைச் சிறிது நேரம் மூடிக்கொள்” என்று சொன்னது தேவதை. சின்ட்ரல்லா தன் இரு கண்களையும் மூடிக்கொண்டாள். சில விநாடிகளானதும், “இப்போது கண்களைத் திறக்கலாம்” என்றது தேவதை.

55