இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மெல்லிய துணி! அற்புதமான வர்ணங்கள் என்று புகழ்ந்து கூறிவிட்டு, சக்கரவர்த்தியிடம் திரும்பி வந்தார். அவரிடமும் அதிசயத் துணியைப் பற்றி ஒரேயடியாக வர்ணிக்கத் தொடங்கி விட்டார்.
இரண்டு நாள் கழித்து, சக்கரவர்த்தி இன்னொரு பெரிய உத்தியோகஸ்தரை அனுப்பிவைத்தார். அவரும் அங்கே சென்று பார்த்தார். அவ ருடைய கண்ணுக்கும் துணி எதுவும் தெரியவில்லை.
ஆனாலும், அவர் விட்டுக் கொடுக்க வில்லை. சக்கரவர்த்தியிடம் திரும்பி வந்து, பார்க்காத துணியைப் பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து பேசினார்.
சக்கரவர்த்திக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
7