பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 3f

சொல்கிறேன். ரஸவாதம் செய்பவர்கள் செம்பைத் தானே பொன்னாக்குகிறார்கள்?’’ . . அப்படித்தான் நீங்கள் சொன்னீர்கள். ’’ - செம்பும் .ெ பா ன் னு ம் ஒரே மாதிரியான இனம் செம்பிலே உள்ள களிம்பு போய்விட்டால் அது பொன்னாகி விடும். செம்பிற்கு இயல்பாக உள்ள களிம்பைப் போக்கும் வித்தைதான் ரஸவாத வித்தை. அந்த வித்தையைப் பற்றி இப்போது சொன்ன தாயுமானவர் பாட்டு விரிவாகத் தெரிவிக்கிறது. இதில் சொல்லப்பட்ட ரஸவாதத்தைத் தான் நான் செய்கிறேன்.' .

இதிலே என்னவோ வேதாந்தபரமாக அல்லவா. விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்? இந்த ரஸவாதத்தை நீ ங் கள் .ெ ச ய் வ .ெ த ன் ற ர ல் எனக்கு ஒன்று ம் புரியவில்லையே! ' .

செம்பிலிருந்து களிம்பைப் போக்கினால் ரசவாதம் சித்தியாகிவிடும். நான் இந்தச் சிறு தீயில் சற்று நேரத் திற்கெல்லாம் ஒரு பெரிய பந்தமாகிற களிம்பை எரித்து விட்டேன். இனிமேல் நான் பத்தரைமாற்றுத் த ங் கம். இதை உருக்கி ஒடச் செய்ய வேண்டியது தான்.”

நீங்கள் எப்போதும் பத்தரை மாற்றுத் தங்கந்தான்' என்று சொல்ல எண்ணினேன்; வாய் வரவில்லை. வெறும் முகஸ்துதிக்கும் எங்கள் நட்புக்கும் வெகு தூரம். இன்னும் விளங்காத உலகத்திலேதான் இருக்கிறேன்' என்றேன்.

இதுவரையில் எனக்கு ஒரு பந்தம் இருந்தது; அந்தப் பந்தம் இந்தக் க ண த் தி ல் நீங்கிவிட்டது. நான் இது வரையில் போலித் துறவியாக இருந்தேன்; இனிமேல் தான் மெய்த் துறவியாகப் போகிறேன். இதுவரையில் நான் பந்தத்துள்ளே சிக்கிச் சிறைப்பட்டிருந்தேன் ; இப்போது விடுதலை பெற்று விட்டேன். இதுகாறும் என் கால்களில் ஒரு விலங்கு மாட்டி இருந்தது; இன்று அது தறிபட்டது. இத்தனை காலம் நான் சம்சாரியாக இருந்தேன்; இப் போதுதான் சந்நியாசியானேன். இன்று வரையில் நான் ஒர் அடிமையாய் உத்தியோகம் பார்த்தேன் ; இதுமுதல் நான் சுதந்தரம் பெற்றேன்.” -