வேலின் பெருமை
பழைய வரலாறுகள்
“கந்தபுராணம் என்பது தமிழிலே கச்சியப்ப சிவாசாரியார் அவர்கள் எழுதியதுதானே? அதற்கு முன்பு கிடையாதே. அதில் உள்ள கதைகள் எப்படிப் பழையன ஆகும்?" என்று சொல்லலாம். முருகனைப் பற்றிய வரலாறுகள் மிகப் பழங்காலத் தொட்டே தமிழ் நாட்டில் வழங்கி வருகின்றன. சங்க நூல்களில் பல செய்திகள் இருக்கின்றன.
பரிபாடலின் முருகன் அவதாரச் செய்தி வருகிறது. சூரபன்மனைப் பற்றிப் புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கந்தபுராணத்தில் காணாத செய்திகளையும் அதில் பார்க்கிறோம். சூரபன்மன் ஒரு மாமரமாகத் தலை கீழாய் இருந்தானென்று பழைய நூல் சொல்கிறது. அந்த மரத்தில் பூ, காய், பழம் எல்லாம் கீழே இருந்தன; வேர் மேலே இருந்ததாம். நல்லவர்கள் எல்லாம் நேரே இருந்தால், அசுரர்கள் தலைகீழாய்த்தானே இருப்பார்கள்? கிளெஞ்ச மலை சூரனுக்குக் கவசம் போல் இருந்ததாம். முருகன் தன் வேலால் அந்த மலையையும் சூரபன்மனையும் ஒருங்கே பிளந்தானாம்.
"ஒருதோகை மிசையேறி உழல்சூரும் மலைமார்பும்
உடனஊடறப
பொருதோகை சுரராச புரமேற விடுகாளை
புகழ்பாடுவாம்"
என்று ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் பாடுகிறார்.
"கிளைபட் டெழுசூர் உரமும் கிரியும்
தொளைபட் டழியத் தொடுவே லவனே"
என்று அருணகிரிநாதர் கந்தரநுபூதியில் பாடுகிறார்.
இத்தகைய வரலாறுகள் பல பழங்கால முதற் கொண்டு வழங்கி வருகின்றன. பின் வந்த கதைகளில் வேறுபாடு இருக்கலாம். வேறுபாடு இருக்கின்ற காரணத்தினாலேயே இவை கதை, உண்மை அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளுறையாகிய தத்துவமே உண்மை என்று தெளிய வேண்டும்.
தேர் அணி இட்டுப் புரம்ளித்
தான்மகன் செங்கையில்வேற்
கூர்அணி யிட்டணு வாகிக்
கிரெளஞ்சம் குலைந்தரக்கர்
119