இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1
- தேன்என்று பாகுஎன்று உவமிக்
- கொணாமொழித் தெய்வவள்ளி
- கோன்அன்று எனக்குஉப தேசித்தது
- ஒன்றுஉண்டு, கூறவற்றோ?
- வான்அன்று, கால்அன்று, தீஅன்று,
- நீர்அன்று, மண்ணும் அன்று,
- தான்அன்று, நான்அன்று, அசரீரிஅன்று,
- சரிரீ அன்றே.
- தேன்என்று பாகுஎன்று உவமிக்
(தேன் என்றோ பாகு என்றோ உவமை கூற இயலாத இனிய மொழியையுடையவளும் தெய்வத்தன்மை உடையவளுமாகிய வள்ளி நாயகியினுடைய கணவன் அன்றைக்கு எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு; அது கூறும் வன்மைக்கு உட்பட்டதோ? அது வானம் அன்று; காற்று அன்று; நெருப்பு அன்று; நீர் அன்று, மண்ணும் அன்று; அவன் அன்று; நான் அன்று; சரீரம் இல்லாதது அன்று; சரீரம் உடையதும் அன்று.
கோன்-தலைவன். அன்று: நெஞ்சறிசுட்டு. வற்றோ - வன்மையானதோ: வன்மைக்கு அகப்பட்டதோ)
288