பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிங்கினி ஓசை

என்ன என்ன விளைந்தன என்று இந்தப் பாட்டில் அருணகிரி நாதர் சொல்கிறார்.

சோமாஸ்கங்தர்

குழந்தை முருகனுடைய விளையாட்டை நினைக்கிறார். அம்பிகையின் குழந்தை அவன். அந்த அம்பிகை பரம சிவனுடைய மனைவி. சிவனும் சக்தியும் சேர்ந்து நிற்கிற கோலம் அர்த்த நாரீசுவரக்கோலம். இருவரும் இணைந்த மூர்த்தி அது. சிவம், சக்தி, முருகன் மூவரும் இணைந்த கோலம் ஒன்று உண்டு. மாகேசுவர மூர்த்தங்கள் என்று சிவபிரானுக்குரிய திருக் கோலங்கள் இருபத்தைந்தைத் தனியே வரிசைப்படுத்திப் புராணங்கள் கூறும். அந்த இருபத்தைந்தில் சோமாஸ்கந்த மூர்த்தமும் ஒன்று. அம்மை, அப்பன், சேய் என்ற மூவரும் ஒருவராய மூர்த்தி அது. உமாதேவியாரோடும் கந்தனோடும் இணைந்தவனாகச் சிவபெருமான் இருக்கும் கோலம் சிறந்தது.

ஒவ்வொரு கோயிலிலும் சோமாஸ்கந்த மூர்த்தியைக் காணலாம். வலப்பக்கத்தில் பரமசிவனும் இடப்பக்கத்தில் அம்பிகையும் இடையில் முருகனும் காட்சி தரும் அந்த இணைப்புக் கோலத்தை நாயகர் என்று சொல்வார்கள். திருவாரூரில் தலைமை பெற்று எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் சோமாஸ்கந்தரே.

ஆலயங்களில் நித்திய பூஜை நடக்கின்றது. அதில் நேரும் குறைபாடுகளுக்குப் பரிகாரமாக நைமித்திகமாகிய விழாக்கள் நடைபெறுகின்றன. ஆலயத்தின் பெருமை விழாக்களால் மிகுதியாகிறது; பயனும் மிகுதியாகிறது. விழாவைச் சிறப்பு என்று சொல்வார்கள்.

'சிறப்பொடு பூசனை செல்லாது, வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு'

என்று திருவள்ளுவர் நைமித்திகமாகிய விழாவைச் சிறப்பென்று குறிக்கிறார்.

விழாக்களுக்குள் சிறந்தது திருத்தேர் விழா அதைப் பிரம்மோற்சவம் என்பர். அதைப் பாராட்டி உலா என்ற பிரபந்தத்தைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.

343