பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1


   வெருவரத் திக்குச் செவிடுபட்
      டெட்டுவெற் பும்கனகப்
   பருவரைக் குன்றும் அதிர்ந்தன
      தேவர் பயம்கெட்டதே.

(ஒப்பற்றவராகிய சிவபெருமானைத் தன்னுடைய வலப்பாகத்தில் உடைய உமாதேவியின் குமாரனாகிய முருகனது உடைமணியென்னும் அணி அணிந்த அழகிய இடையில் கட்டிய கிங்கிணியின் ஒசை காதிலே பட, அசுரர் திடுக்கிட்டு அஞ்ச, திசைகள் செவிடுபட்டு எட்டு மலைகளும் பொன்னாலான பெரிய சாரலையுடைய மேருமலையும் அதிர்ந்தன; தேவர்களின் பயம் அழிந்தது.

ஒருவர் - ஒப்பற்றவர். உடையாள் - உமாதேவி. உடைமணி - இடையில் அணியும் ஒருவகை ஆபரணம். அரை - இடை. அரக்கர் - ராட்சதர்; இங்கே அசுரரைக் குறித்தது. வெருவர-அஞ்ச. கனகம் - பொன். வரை - மலைப்பக்கம்.)


352