பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் "வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!” என்று பொருள் அத்தனையும் இறைவனாகவே பார்த்தனர். நாம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். அதைப் பொருளாகவே பார்க்கிறோமே யொழிய இறைவனாகப் பார்க்கும் ஆற்றல் நமக்கும் இல்லை. நமக்குள்ளேயே அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனைப் பார்க்கும் ஆற்றலும் நமக்கு இல்லை. இறை வனைப் பார்ப்பது இருக்கட்டும். நம் உடம்புக்குள்ளே ஏதாவது நோய் வந்தால் அதைப் பார்க்கக்கூடிய ஆற்றலும் நமக்கு இல்லை. உள்ளத்துக்குள்ளே உள்ள கருத்தைக் காட்ட அமெரிக்கா வில் கருவி கண்டுபிடித்திருக்கிறார்களாம். அங்கே உறையும் இறை வனைக் காண ஏதேனும் கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது விஞ்ஞானத்தினால் முடியாது; மெய்ஞ்ஞானத்தால் தான் முடியும். . தாயுமானவர் கண்ட முறை தாயுமானவர் இறைவனை மூன்று நிலைகளிலே கண்டு இன்புற்றவர். அண்டத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலும், அண்டத்தி லுள்ள எல்லாப் பொருளாக உள்ள நிலையிலும் தம்முள்ளே உறைகின்ற நிலையிலும் கண்டு அநுபவ இன்பம் துய்த்தவர். இறைவனை அவர் ஒரு வடிவத்தில் முதலில் வழிபட்டார். உலகத்துக்கு அப்பால் உள்ளவனை ஒரு பிம்பத்தில் அடையாள மாக நிறுவினார். அவன்பால் காதல் கொண்டு உள்ளம் நெக்கு நெக்கு உருகி வழிபட்டார். இது முதல் நிலை. வடிவத்தில் உள்ள இறைவனுக்கு வழிபாடு நடத்த ஒரு நாள் பூக் கொய்துவர நந்தவனம் சென்றார், குடலையை எடுத்துக்கொண்டு. தோட்டத்திலே வெள்ளைவெளேர் என்று நந்தியாவட்டை மலர்கள் மலர்ந் திருந்தன. இறைவனை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச அன்பு கொண்டு மலரைப் பறிக்கக் கையைக் கொண்டுபோன அவர் உள்ளத்திலே பக்குவம் முதிர, இரண்டாம் நிலை அப்போது வந்தது. இதுவரையிலும் இறைவனை அவர் ஒரு வடிவிலே கண்டு வழிபட்டவர். இப்போதோ தாம் பறிக்கப்போன 13