பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரச் சொற்பொழிவு வரிசையில் ஒன்பதாவது புத்தகமாகிய இதில் ஐந்து பாடல்களுக்குரிய விளக்கங்கள் இருக்கின்றன. 45-அம் பாடல் முதல் 49 வரையிலுள்ள பாடல்களைப் பற்றிய சொற்பொழிவுகள் இவை. முதல் பாடலில் சிவபெருமானுக்குக் குருவாக நின்று உபதேசம் செய்தவனாகிய வேலவன் தமக்குச் செய்த உபதேசம் இன்னதென்று அருணகிரியார் சொல்கிறார். ஐந்து பூதங்களால் அமைந்த இந்த உடம்பாகிய குடிலில் இராமல், யாரும் அறியாத சிறப்புடைய முத்தியென்னும் வீட்டில் உரையும் உணர்வும் அற்று இரு" என்று குமரகுருபரன் உபதேசம் செய்தானாம். இவ்வாறு தமக்கு முருகன் உபதேசம் செய்ததாகத் திருப்புகழிலும் ஏனை நூல்களிலும் அருணகிரியார் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு விளக்கம் கூறும்போது பூதவிடாகிய உடம்பைப் பற்றிய பல செய்திகளைச் சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இது ஐம்பூதத்தின் கலவையென்றும், நிலையாத வீடு என்றும், அடிக்கடி மாற்றும் வீடு என்றும் சொல்லிவிட்டு, நிலையான வீடு என்று ஒன்று உண்டு என்றும் இதன் இயல்பு இன்னதென்றும் சொல்லியிருக்கிறேன். அப்பால் முருகன் சிவபெருமானுக்குக் குருவாக அமைந்த வரலாற்றையும், அச்செய்தியில் அருண கிரியார்க்குள்ள ஈடுபாட்டையும் விரித்தேன். பிறகு கஜாசுரசங் காரத்தின் வரலாற்றையும் அதனுடைய உட்கருத்தையும் திரிபுர சங்காரத்தின் உள்ளுறையையும் விளக்கிவிட்டு, முன்னே அலங்காரத்தில் வந்த 'ஓர ஒட்டார்” என்ற பாட்டுக்கும் இந்தப் பாட்டுக்கும் உள்ள பொருள் தொடர்பை எடுத்துரைத்தேன். இவ்வளவும் சேர்ந்து முதல் சொற்பொழிவாக அமைகின்றன. தனிவீடு என்னும் பெயரோடு அச்சொற்பொழிவை இப்புத்தகத் தில் முதலில் காணலாம். 237