பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அடுத்தது இருவகை விளையாட்டு என்னும் சொற்பொழிவு, ஞான விநோதம், மாயா விநோதம் என்ற இரண்டையும் ஒரு பாட்டில் அருணகிரியார் சொல்லுகிறார். மாயா விளையாட்டு விளையாடும் ஆன்மாக்கள் எவ்வாறு மனத்திற்கு அடிமைப் படுகின்ற என்பதையும், விளையாட்டே வினையாகும் திறத்தையும், இந்த விளையாட்டை மாற்றி இறைவன் திருவருள் பெற முயலவேண்டும் என்பதையும் முதலில் விளக்கும் பகுதியை இதில் காணலாம். பின்பு காமத்தால் உண்டாகும் தீங்குகளும் ஞான விளையாட்டின் தன்மையும் வருகின்றன. ஊன நாடகம், ஞான நாடகம் என்னும் இரண்டையும் பற்றி மணிவாசகப் பெருமான் கூறியிருக்கும் பாட்டு இங்கே ஒப்புமையுடையதாக இருப்பதால் அதற்கும் ஓரளவு விளக்கம் பின்பு வருகிறது. "பத்தித் திருமுகம்" என்று தொடங்கும் அலங்காரப் பாடலின் விளக்கம் ஆறுமுக அமுதம் என்ற தலைப்போடு மூன்றாவது சொற்பொழிவாக உள்ளது. இன்பமும் துன்பமும் மனித வாழ்வில் உள்ளன என்றும், சிற்றின்பத்தை நுகர்பவர்கள் பேரின்பம் உண்டென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வின் பத்தைப் பெற்ற பெருமக்கள் தாம் பெற்ற அநுபவங்களைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்கள் என்றும், அவை முறையில் வேறு வேறாக இருந்தாலும் விளைவில் ஒன்றாகவே இருக்கு மென்றும், அருணகிரிநாதர் தாம் பெற்ற அநுபவத்தைச் சொல்கிறாரென்றும் கூறி, அவர் எவ்வாறு சொல்கிறார் என்பதை விளக்கத் தொடங்கினேன். புத்திக் கமலம் அன்பினால் விரியும் போது ஆனந்த ஊற்றுத் தோன்றுமென்றும், அது படிப்படியாகப் பரந்து பரமானந்தக் கடலாகுமென்றும், அதில் ஆறுமுக அமுதம் தோன்றுமென்றும் புலப்படுத்தினேன். நாம் கோயிலில் காணும் காட்சி எவ்வாறு உண்முகமாகும்போது தோன்றுமென்பதையும், அநுபவ நிலையில் அது எவ்வாறு தோன்றும் என்பதையும் ஒருவாறு விளக்கியிருக்கிறேன். ஆறு முகங்கைைளப் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் கூறு வனவற்றை இறுதியில் கூறி இச்சொற்பொழிவை முடித்தேன். - - - . . . 238