பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பெரிய வியாபாரத்தைத் தொடங்கி, முதல் போட்டுச் செலவு செய்ய வேண்டிய வகை எல்லாம் நன்றாகச் செய்து ஒழுங்கு பண்ணுகிறான். அந்த வியாபாரத்தில் லாபம் எடுக்கிற தருணத்தில் அவன் திடீரென்று இறந்து போகிறான். இத்தகைய காட்சிகளை நாள்தோறும் உலகத்தில் பார்க்கிறோம். இதற்கும் செடிகொடி போட்டவன் கதைக்கும் வேறுபாடு அதிகம் இல்லை. நிலையான வீடு எப்போதுமே நிலையாக ஒரு வீட்டில் இருக்கும் வாழ்வு வருமானால் அவன் சுதந்தரமாக எந்தக் காரியமும் செய்து கொள்ளலாம். ஆனால் அத்தகைய வாழ்வு வாழும் வீடு இன்னது என்று மக்கள் தெரிந்து கொள்ளவில்லை. பெரியவர்கள் அப்படி ஒரு வீடு உண்டென்று சொல்கிறார்கள். அதற்குத்தான் வீடு என்றே பெயர் கொடுத்திருக்கிறார்கள். வீடு - முத்தி. நிலை இல்லாத குடிசையாக இருக்கும் இந்த உடம்பை விட்டு உயிர் நீங்கினால் மறுபடியும் வேறு ஒரு குடிசைக்குத் தாவுகிறது. பிறவிதோறும் உயிர் விலாசம் மாறிக் கொண்டிருக் கிறது. எப்போதும் ஒரே விலாசம் போட்டுக் கொண்டு வாழ் வதற்கு வகை இல்லாமல் திண்டாடுகிறது. ஒரே விலாசமாக இருக்க வேண்டுமானால் நிலையான வீட்டைத் தேடிக் கொள்ள வேண்டும். அப்படித் தேடுகின்ற முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாரோ அவர்களையே பக்தர்கள் என்றும், ஞானிகள் என்றும் சொல்கிறார்கள். - நாம் தேடிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் அதை நமக்குக் கொடுக்க வேண்டும். அப்படி ஒருவன் இருக்கிறான். அவன்தான் ஆண்டவன். அந்த வீட்டைத்தான் இருந்து வாழ்வதற்காக அவன் வைத்திருக்கவில்லை. தன்னுடைய குழந்தைகள் துன்புறாமல் சுதந்தரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே வைத்திருக்கிறான். இருந்தாலும் நல்ல குணம் இல்லாத பிள்ளைகளாக இருந்தால் அவர்களைக் கொஞ்சம் துன்பம் அநுபவிக்கச் செய்துவிட்டு, ஒட்டைக் குடிசை யில் இருக்கச் செய்து, அடிக்கடி கட்டிடங்களை மாற்றித் தந்து தண்டனை கொடுக்கிறான். "இப்படி வாழ்கின்ற நிலை போதும், அப்பா இனிமேல் இத்தகைய வீடுகளில் நான் இருக்க மாட்டேன். 244