பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தோலையே மேலே போர்வையாகப் போர்த்துக் கொண்டவன் அவன்; திரிபுரத்தை அழிததவன். சிவபெருமான் செய்த பல வீரச் செயல்களுக்குள் முக்கிய மானவை எட்டு. அந்த எட்டு வீரச் செயல்களையும் அவன் செய்ததை நினைப்பதற்குத் தமிழ் நாட்டில் எட்டுத் தலங்கள் இருக்கின்றன. வீரத்தைப் புலப்படுத்தும் அத்தலங்களுக்கு வீர ஸ்தானம் என்று பெயர். அதுவே பின்பு வீரட்டானம் என்றும் வீரட்டம் என்று மாறி வந்தது. ஒவ்வொரு வீரட்டத்திலும் சிவபெருமான் செய்த ஒவ்வொரு வீரச் செயலின் நினைப்பை உண்டக்கும் அடையாளங்கள் இருக் கின்றன. அந்த எட்டு வீரட்டானங்கள் ஆவன. 1. திருக்கண்டியூர்: பிரமன் சிரங் கொய்தது. 2. திருக்கோவலூர்: அந்தகாசுரனைச் சங்கரித்தது. 3. திருஅதிகை: திரிபுரத்தை எரித்தது. 4. திருப்பறி யலூர் தக்கன் சிரங் கொய்தது. 5. திருவிற்குடி சலந்தராசுரனைச் சங்கரித்தது. 6. வழுவூர் யானையை உரித்தது. 7. திருக்குறுக்கை: காமனை எரித்தது. 8. திருக்கடவூர்: யமனை உதைத்தது. இவற்றை அட்ட வீரட்டம் என்பர். 'பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம்அதிகை மாமன் பறியல்,சலந்தரன் விற்குடி, மாவழுவூர் காமன் குறுக்கை, யமன்கட ஆர்இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையும் திங்களுஞ் சூடிதன் சேவகமே” என்பது அட்ட வீரட்டம் இன்னவை என்பதைச் சொல்கிறது. சிவபெருமான் புரிந்தருளிய எட்டு வீரச் செயல்களுக்குள் இரண்டு செயல்களை அருணகிரியார் இந்தப் பாட்டில் சொல்கிறார். கஜாசுர சங்காரம், திரிபுர சங்காரம் என்னும் இரண்டையும் நினைப்பூட்டுகிறார். இருகோட்டு ஒரு கைப் பொரு பூதரம் உரித்து, ஏகாசம் இட்ட புராந்தகன் கஜாசுர சங்காரம் ரெகாசம் - போர்வை. கஜாசுரனை உரித்து, மேலே போர்வை யாகப் போர்த்திக் கொண்ட வீரச் செயலை முதலில் சொன்னார். இதனால் சிவபெருமானுக்குக் கிருத்திவாசன் என்ற பெயர் 25O