பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் பிள்ளை சிறிய பையன்' என்றால் பெரிய பையன் ஒருவன் இருக்கிறான் என்று தெரிகிறது. அதுபோல, சிற்றின்பம் என்ற தொடர் பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறதை உணர்த்துகிறது. அறிவினாலும் ஆற்றலினாலும் சிறியவர்களாக இருக்கும் நாம் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். பெரியவர்கள் பேரின்பத்தை நாடுகிறார்கள். நாம் செய்கிற முயற்சிகள் யாவுமே சிறிய முயற்சி களே. நெடுங்காலம் செலவிட்டும் பெரிய முயற்சிகளைச் செய்தும் இந்த இன்பத்தை அடைகிறோமே; இது எப்படிச் சிறிய இன்பம் ஆகும்?' என்று தோன்றும். நெடு நாளைக்கு இந்த இன்பம் நில்லாமல் பின்னாலே துன்பம் தரும் வகையில் அமைந் திருப்பதனால் இது சிற்றின்பம் ஆகியது. இந்த இன்பம் பொய் யான இன்பம்; போலி இன்பம். மெய்யான இன்பம் என்பது மாறாமல், குறையாமல், நிறைவாக இருக்கிற பேரின்பமே. உண்மையில் அதுதான் இன்பம் என்று சொல்லவண்டும். நம்பிக்கை இல்லை அத்தகைய இன்பத்தை அடைவது எப்படி என்பதுதான் மனிதனுடைய வாழ்க்கையில் பெரிய கேள்வி. பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறது என்று யாரேனும் சொன்னால் அதைக் காதாலே மாத்திரம் கேட்கிறோம். மனம் நம்புவது இல்லை. நமக்கு உறுதிப்பாடு இல்லாமல் ஐயம் பிறக்கிறது. "இறைவன் இருக்கிறான். அவன் திருவருள் செய்வான். அந்தத் திருவருளால் பேரின்பம் பெறலாம்' என்ற கருத்தை ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஆயிரக்கணக்கான பேர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒரு சமயம் அல்ல, இரண்டு சமயம் அல்ல. எல்லாச் சமயங்களும் அதை வற்புறுத்திக் கூறுகின்றன. ஏதோ ஒரு காலத்தில் சொன் னார்கள் என்பதும் இல்லை. பல காலமாக இந்தக் கருத்தைப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இப்போது உள்ளவர்களும் சொல்வதை நாம் நேரில் கேட்கிறோம். முன்னாலே இருந்த பெரியவர்கள் தாம் இயற்றிய நூல்களில் சொல்லி இருக் கிறார்கள். உலகத்திலுள்ள எல்லாப் பகுதிகளிலும் இறைவனுடைய திருவருளில் ஈடுபட்டு அதனால் கிடைத்த இன்பத்தை நுகர்ந்து, நீங்களும் இத்தகைய இன்பத்தைப் பெறலாம் என்று சொன்ன பெரியவர்கள் பலர். இன்ன சாதி, இன்ன சமயம், இன்ன மொழி, 35.Q&T.III–19 279