பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் திருக்கிறார்கள். தம்முடைய முயற்சியினாலே பேரின்பத்தைப் பெற்றதாகச் சொல்லாமல், "அவனுடைய திருவருளால் பெற் றேன் என்று சொன்ன பெருமக்களே பலர். நம்மைப் போல வாழும் காலத்தில் அவர்கள் கண்டு அறியாத தனி இன்பத்தை இறைவன் திருவருளைப் பெற்ற பிறகு அடைகிறார்கள். அப் போது அவர்களுக்கு உண்டாகும் வியப்பு அளவிட முடியாது. 'கண்டறியாதன கண்டேன்' என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார். 'தேடிக் கண்டுகொண்டேன்’ என்று பெருமகிழ்ச்சியோடு கூறுகிறார். காணுதலாவது அநுபவித்தல். கண் முதலிய ஐந்து புலன் களாலும் அநுபவிக்கின்ற அநுபவங்களைக் காணுதல் என்று சொல்வது வழக்கம். இந்திரியங்களின் நுகர்ச்சிக்கு உட்பட்ட அநுபவத்தைப் பிரத்தியட்சப் பிரமாணம் என்று சாஸ்திரம் கூறும். அதையே கண்கூடு என்று தமிழில் சொல்வார்கள். "காற்றுக் குளிர்ச்சியாக இருப்பதைக் கண்டேன்' என்று குளிர்ச்சியாக வீசும்போது நுகர்ந்த நுகர்ச்சியைச் சொல்வதுண்டு. அப்படி நாவுக்கரசர், கண்டு கொண்டேன்' என்று வீறுடன் பேசுகின் றார். இறைவனை அவர் அநுபவித்தாராம். 'எப்படிக் கண்டார்?" என்ற கேள்விகள் எழும். அந்தக் கேள்விக்கு அவர் விடை சொல்லவில்லை. ஆனால் பல இடங்களில் அவர் கூறியிருக்கும் அநுபவச் செய்திகளை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் இவை போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். நமக்குக் கேள்வி கேட்கத் தெரிகிறதே யொழிய அதற்கு விடை எங்கே இருக்கிறதென்று கண்டு பிடிக்கும் ஆர்வம் இல்லை. அந்த ஆர்வம் இருந்து, நாமும் இந்த இன்பத்தைப் பெற வேண்டு மென்ற பசியும் இருந்தால் நிச்சயமாக ஆண்டவன் அருள் பெற்ற பெரியவர்களுடைய திருவாக்கிலே நம்முடைய கேள்விக்கும் ஐயத்திற்கும் உரிய விடைகளைக் காணலாம். * முறைகள் பல இறைவனுடைய திருவருள் பெற்ற பெருமக்கள் பலரும் தாம் பெற்ற அநுபவத்தை விம்மிதத்தோடு பேசி இருக்கிறார்கள். 281