பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சொல்லி இருக்கிறார்கள். இப்படி வெவ்வேறு வகையில் சொல்வதனால் அது உண்மையா என்ற ஐயம் நமக்கு உண்டாகி விடுகிறது. எல்லோரும் ஒன்றே சொன்னால் அது நிச்சயம் என்று தெளிந்து கொள்ளலாம். ஒருவன் ஒரு பொருளைத் திருடிக்கொண்டு ஒடுகிறான். அவனை ஆயிரம் பேர் பார்த்தார்கள். அவ்வளவு பேரும், "இவன்தான் திருடினான். என்று ஒருவனைச் சுட்டிக் காட்டுவார்கள். அப்போது அவன் திருடியது உண்மை என்று தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லாமல் பொய்ச் சாட்சி சொல்வதாக இருந்தால் ஆயிரம் பேரும் ஆயிரம் விதமாகச் சொல்வார்கள். இந்தச் சாட்சி மாறுபாட்டினால் அவர்கள் சொல்வன எல்லாம் பொய் என்று தெரிந்து கொள்ளலாம். அத்தனை பேரும் சொல்கிற சாட்சியில் எது உண்மை என்று தெரிந்து கொள்ள முடியாது. அப்படி, இறைவனுடைய திருவருளினால் நான் பெற்ற இன்பம் இத்தகை யது என்று ஒவ்வொருவரும் சொல்லும்போது இறைவனைப் பற்றி வெவ்வேறு வகையில் பேசுகிறார்கள். ஒருவர், "நான் ஜடாதரனாகக் கண்டேன்; சந்திரசேகரனாகக் கண்டேன்' என்று சொல்கிறார். மற்றொருவர், ஆறுமுக நாத னாகக் கண்டேன்' என்று சொல்கிறார். வேறு ஒருவர், 'ஆனை முகம் கொண்டவனாக இறைவன் எனக்குக் காட்சி அளித்தான்' என்றும், மற்றொருவர், 'கையில் கோதண்டத்தை ஏந்தியவனாக, சீதா லசுஷ்மண பரத சத்துருக்னரோடு எழுந் தருளினான்' என்றும் சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தத்தமக்குத் தோற்றிய அநுபவங்களை, கண்ட காட்சிகளைச் சொல்லி இருக்கிறார்கள். 'இவ்வளவும் உண்மை ஆகுமா? உண்மை பலவகையாக இருக்க முடியுமா? எல்லாமே பொய்யா? அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றுதான் உண்மையா? இவ்வளவு பேர் சொல்கின்ற வகையில் நாம் எந்த முறையை பின்பற்று வது? - இத்தகைய சந்தேகங்கள் பல எழுவது இயல்பே. அநுபவம் ஒன்றே அவர்கள் வெவ்வேறு வகையில் இறைவனுடைய திருவருளைப் பெற்றாலும் அவர்கள் பெற்ற இன்ப உணர்ச்சி பொதுவானது அது ஒன்றே. இதற்கு ஒர் உதாரணம் சொல்லிப் பார்க்கலாம். 232