பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் விதையும் விளைவும் பெரியவர்கள் நமக்கு அளித்துள்ள உபதேச முறைப்படி நாம் வழிபடும்போது வழிகாட்டியாக விக்கிரகத்தை அல்லது படத்தை நாம் வைத்துக் கொண்டு உபாசனை செய்கிறோம். அவர்கள் சொல்லித் தந்த தோத்திரங்களைப் பாடுகிறோம். இவை யாவும் வித்துப் போன்றவை. அவர்களிடம் இருந்து நாம் பெற்றுக் கொண்டவுடனே பயன் உண்டாகுமென்று எதிர்பார்க்க முடியாது. வித்துக்கள் தாமே விளைவதில்லை. கடலை விதையை நமக்கு ஒருவர் கொடுத்தால் அதை நட்டுப் பயிர் செய்யவும் செய்யலாம்; மாவாக அரைத்துப் பலகாரமும் செய்யலாம்; சுண்டலாகவும் செய்து சாப்பிடலாம். அது போலவே கடவுளுடைய படங்களை அழகுக்காக மாட்டி வைக்கலாம். எத்தனையோ பேர் இப்போது நடராஜ விக்கிரகங்களைக் கொண்டு வந்து தம்முடைய அறையில் வைத்திருக்கிறார்கள்; நாய்ப்பொம்மை, புலியின் பொம்மை, மனிதன் பொம்மை முதலியவற்றைப் போலவே அதையும் வைத்திருக்கிறார்கள். கடலை விதையைச் சுண்டலாகச் சாப்பிடு வது போன்ற செயல் அது. அப்படி இல்லாமல் கடலையை நட்டு வளர்த்தால் ஒன்றுக்குப் பத்து மடங்கு விளையும். நெல்லில்கூடச் சாப்பாட்டு நெல் என்றும், விதை நெல் என்றும் வேறு பிரித்து வைக்கிறார்கள். விதை நெல் என்று சேமித்து வைத்திருந்தால் அதற்கு மதிப்பு அதிகம். குடியானவனுக்கு அந்த நெல்லினிடத் தில் அதிக அன்பு இருக்கும். பஞ்சம் வந்தாலும் விதை நெல்லைச் சமையல் செய்து சாப்பிடமாட்டான். விதையைச் சமையல் செய்ய முடியாது என்பது அல்ல; அதனால் விளைகின்ற பெரும் பயன் ஒன்று இருக்கவும், அதை விட்டு விட்டுச் சிறு பயனுக்காக அதனை உபயோகப்படுத்தக் கூடாது என்ற கருத்து வேளாள னுக்கு இருக்கிறது. விதையை நல்லபடி பயன்படுத்திக் கொள் ளாதவன் அறிவிலி. - இறைவனுடைய திருக்கோயிலுக்குச் சென்று நாம் காணு கின்ற திருவுருவம் கண்ணுக்கு அழகாக இருக்கிறதென்றும், அது போல நம் வீட்டில் ஒன்று வைத்துக் கொள்ளலாம் என்றும்’ நினைத்து அந்த அளவில் நிற்கிறவர்களைச் சிறந்த அறிவுடை யவர்கள் என்று சொல்ல முடியாது. அந்தத் திருவுருவத்தை வித்தாகக் கொண்டு அன்புநீர் பாய்ச்சிப் பல சாதனைகளால் 285