பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 துன்பம் இல்லாப் பயணம் அவர்கள் செய்கிற வினை ஒன்றும் இல்லை. அதனால் புதிதாக வருகின்ற புண்ணிய பாவங்களும் இல்லை. இறைவ னுடைய திருவருளாகிய வண்டியில் ஏறிக்கொண்டு அவர்கள் பிரயாணம் செய்கிறார்கள். வண்டியில் ஒருவன் போகிறான். காலால் நடக்கிறவனும் பிரயாணம் செய்கிறான். இரண்டு பேரும் குறிப்பிட்ட ஒரே ஊருக்குப் போகிறார்கள். ஆனால் நடந்தவ னுக்குப் பயணத்தினால் உண்டான அலுப்பு இருக்கும். வண்டி யிலே உட்கார்ந்தவனுக்கு அந்தத் துன்பம் இல்லை. அவன் எத்தனை தூரத்தைக் கடந்து சென்றாலும் தன்னுடைய செயலால் கடக்கவில்லை. ஆகவே அவனுக்குப் பயணத்தினால் உண்டாகிற துன்பம் இராது. இறைவனுடைய திருவருளை ஆதாரமாகக் கொண்டு தம் முடைய செயலை இழந்தவர்கள் தோற்றத்தில் பல காரியங்களைச் செய்கிறவர்களைப் போல இருந்தாலும் அவர்கள் செய்யாதவர் களே. அவர்கள் அடைவது இன்பந்தான். கட்டை வண்டியிலும் குதிரை வண்டியிலும் செல்கிறவர்கள், நடந்து செல்கிறவர்களைப் போல நெடுந்துாரம் சென்றாலும் துன்பம் இராது. ரெயிலில் போகிறவர்களிலும் மூன்றாம் வகுப்பில் போகிறவர்கள் தூங்கு வது இல்லை. ஒருகால் தூங்க முயன்றாலும் நன்றாகத் தூங்க முடியாது. முதல் வகுப்பில் போனவர்களோ ஏறினவுடன் படுத்துக் கொள்கிறார்கள். இறங்குகிற இடம் வந்தால் விழித்துக் கொள்கிறார்கள். தம்முடைய வீட்டிலே மெத்தையில் படுத்துத் தூங்குவதுபோல அவர்கள் வண்டியிலும் தூங்குகிறார்கள். அப்படியே இந்த உலகப் பிரயாணத்தில் எம்பெருமானுடைய திருவருளில் ஈடுபட்டுப் பசு கரணங்கள் எல்லாம் மாறிப் பதி கரணங்களாகப் பெற்றவர்கள் ஜீவ யாத்திரையில் மற்றவர்களைப் போலவே தோற்றினாலும் அவர்கள் மோட்ச வீட்டில் இருந்து இன்பத்தைப் பெறுபவர்களாகவே நிற்கிறார்கள். ஆனால் அதற்கும் இதற்கும் ஒரே ஒரு வேறுபாடு. இங்கே சரீரம் இருக்கிறது. அங்கே சரீரம் இல்லை. அதனால் இந்த நிலைக்கு ஜீவன் முத்தி நிலை என்று பெயர் தந்திருக்கிறார்கள். ஜீவன் முத்தன் பரமானந்தக் கடலிலே துளையம் ஆடுவான். அவனுக்கு அப்போது செயல் என்பது ஒன்றும் இல்லை; 2.94