பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 இரண்டு கால்கள் இருந்துங்கூட அவை பண்ணுகின்ற குறும்பு பொறுக்க முடியாமல் இருக்கிறதே!' என்று அவர்கள் சொல் வதாக அந்தப் பெரும் புலவர் பாடியிருக்கிறார். 'நையா நின்ற சிறுமருங்குல் நங்கை உமையாள் பரமனொடும் நறுநீர்ப் பொய்கைத் தடங்கரைவாய் நண்ணிமுகமாறினுக்கேற்பக் கையா றிரண்டு செய்ததுபோல காலா றிரண்டு புரியாமல் கருதி இரண்டே புரிந்தனள்முற் கடையேம் செய்த நல்வினையால் மெய்யாயிரண்டா யிருந்துமவை விளைக்கும் குறும்பு பொறுக்கரிதா விளைந்த தினியாம் செயலென்னே வீதி தோறும் விடாதமர்ந்து செய்யாள் மகிழும் இடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே! சிந்திப் பவர்உள் ளுறமுதத் தெளிவே, சிற்றில் சிதையேலே,” இந்தப் பாட்டில் முருகப் பெருமானுக்கு ஆறுமுகங்களும் அந்த முகங்களுக்கு ஏற்பப் பன்னிரண்டு திருக்கரங்களும் இருந் தாலும், பெருக்கல் வாய்பாட்டு முறையில் பன்னிரண்டு கால்கள் அமையவில்லை, இரண்டு கால்களே உள்ளன என்ற கருத்து அமைந்திருக்கிறது. 'முகமா றினுக்கேற்பக் கையா றிரண்டு செய்ததுபோல் காலா றிரண்டு புரியாமல் கருதி இரண்டே புரிந்தனள்.' இப்படித்தான், முகம் எப்படி இருந்தாலும், கைகள் எப்படி இருந்தாலும், இறைவனுடைய திருவுருவங்களில் கால்கள் எப் போதும் இரண்டாகவே அமைந்திருக்கின்றன. முகம் முதலிய வற்றில் வேறுபாடு இருந்தாலும் திருத்தாள் தாமரை போல ஒரே மாதிரி இருக்கிறது. வள்ளுவர் கண்ட வழி இந்த உண்மையை வள்ளுவர் உணர்ந்தார். நாம் கடவுளுடைய உருவத்தைப் பற்றிச் சொல்லவேண்டும். ஆனால் வேறுபாடுள்ள உருவங்களைச் சொல்லக் கூடாது. எல்லா வற்றுக்கும் பொதுவாக இருக்கும் பகுதியைச் சொன்னால் போதும் என்று எண்ணினார். அடியார்களுக்குப் புகல் இடமாக நிற்பது திருவடியே. திருவடியைச் சொன்னால் ஆண்டவனின் உருவம் முழுவதையும் சொன்னதாக ஆகும. 32O