பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கண்ணபிரான் அவருடைய பேச்சைக் கேட்டான். நீ _ சொல்வது சரிதான். ஆனால் உன்னுடைய தம்பிமார்கள் என்ன சொல்வார்களோ? அன்று திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் உரிந்தபோது அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சபதம் செய்திருக்கிறார்கள். அவைகள் எல்லாம் முற்றுப் பெற வேண்டும். திரெளபதி தன் கூந்தலை விரித்துக்கொண்டு நிற்கிறாள். அந்தக் கூந்தலை அவள் முடித்துக் கொள்ள வேண்டும். இவற்றைச் செய்யாமல் நீங்கள் மீட்டும் காட்டுக்குப் போய் விட்டால் உலகத்தில் உள்ளவர்கள் ஏசமாட்டார்களா?' என்று கேட்டான். தருமபுத்திரர் யோசித்து, "அப்படியானால் நீ ஒரு முறை தூது போய்விட்டு வா. அவர்கள் பாதி நாடு தரட்டும். இல்லாவிட்டால் ஐந்து ஊர் தரட்டும். அவையும் இல்லாவிட்டால் ஐந்து வீடுகள் தரட்டும். ஒன்றும் இல்லை என்று மறுத்தால் போர் செய்வோம் என்று சொல்லிவிட்டு வா' என்றார். கண்ணன் தருமபுத்திரருடைய தம்பிகளின் கருத்தைக் கேட்கத் தொடங்கினான். வீமனைக் கேட்டபோது அவன் மிகவும் சினந்து, "என்னைத் துது அனுப்புங்கள். எல்லோரையும் என் கதைக்கு இரையாக்கி வருகிறேன்' என்று கோபத்தோடு சொன்னான். அருச்சுனனும் மிக்க வீறுடன் பேசினன். நகுலனும் சினந்து அப்படியே சொன்னான். பிறகு சகாதேவனிடம் வந்து, "உன் கருத்து என்ன அப்பா?’ என்று கேட்டான் கண்ணன். சகாதேவன் கூற்று சகாதேவன் சிறந்த ஆத்ம ஞானி, மற்றவர்கள், நம்முடைய ராஜ்யம், அவர்களுடைய ராஜ்யம்' என்று வேறுபடுத்திப் பார்க் கின்ற அறிவும், அதனால் கோபமும், பகையும் கொண்டிருந்தார் கள். சகாதேவன் சத்தியத்தை உணர்ந்தவன்; அவன் சொன்னான்; 'கோபாலா, இனி என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாதா? உன் எண்ணம் எதுவோ அதுதான் என்னுடைய எண்ணம்' என்று சொன்னான். இதைக் கேட்ட கண்ணன், 'எல்லோரையும் போல இவன் பேசவில்லையே! இவனிடம் ஏதோ நுட்பமான கருத்து இருக்கிறது. அதை இரகசியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்' என்று எண்ணி அவனைத் தனியே அழைத்துச் சென்றான். 322