பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் 'அணுவைத் துணைத்தேழ் அலையைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்று பாடினாள். அணுவைத் துளைத்தால் அணுகுண்டு விளையும் என்று பாட்டிக்குத் தெரியாதோ என்னவோ? மிகவும் நுட்பமான கருத்துக்களை வைத்துத் திருக்குறளைப் பாடியிருக்கிறார் வள்ளுவர் என்பதற்கு அந்த அருமையான உவமையை ஒளவை எடுத்தாண்டாள். உறுதிப் பொருள்கள் இப்படிச் சுருக்கமாகப் பாடுகிற ஆற்றல் பெற்ற பாட்டி மனிதனுக்கு உரிய உறுதிப் பொருள்கள் நான்கையும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்று புலவர்கள் கேட்டபோது ஒரு பாட்டுப் பாடினாள். . 'ஈதல் அறம்' என்று எடுத்தவுடன் விளக்கினான். தர்மம் செய்ய வேண்டும ானால் பொருள் வேண்டும். பொருளை எவ்வாறு ஈட்டுவது? 'தீவினை விட்டு ஈட்டல் பொருள்' என்று சொன்னாள். பணம் ஈட்டுவதற்கு இந்தக் காலத்தில் எத்தனையோ தந்திரங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். எப்படியாவது பொருள் கிடைத்தால் போதும் என்ற ஒரே நோக்கத்தோடு இப்போது பொருளை ஈட்டுகிறார்கள். ஆனால் பழங்காலத்தில் இப்படி ஈட்டுவதைப் பொருளாக நினைக்க வில்லை. நல்ல வழியில் ஈட்டிய பொருளையே பொருள் என்று சொன்னார்கள். நல்ல வழியாவது அறநெறி. அறநெறியில் ஈட்டிய பொருளே பின்னும் அறம் செய்வதற்குத் தகுதியானது. இந்தப் பண்பை நினைவு கொண்டு ஒளவை பொருளைப் பற்றிச் சொன்ன பிறகு காதலைப் பற்றிச் சொன்னாள். "காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்." உயிரோடு ஒட்டிய காதல் இது ஒரு சூத்திரம் போல அமைந்தது. கணவனும் மனைவி யும் வாழ்கின்ற இன்ப வாழ்க்கைக்கு மிக அருமையான 4.i.