பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பல பெரிய மனிதர்களின் தொடர்பு கொண்டு நயமாகப் பேசி அவர்களுக்குரிய சிறுசிறு காரியங்களைச் செய்து அவர்களால் பொருள் உதவி பெற்றார். கல்லூரியில் படித்தார். மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார். அதன் விளைவாக அவருக்கு நலல உத்தியோகம் கிடைத்தது. திருமணப் பருவம் சற்றுத் தாண்டி விட்டாலும் அவருடைய குணநலங்களையும் பதவியையும் கண்டு ஒருவர் தம் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். நல்ல உத்தியோகமும், நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணும் சேர்ந்த பிறகு வளம் பெருகக் கேட்கவேண்டுமா? மேலும் அவர் பொருளை நிரம்பச் சம்பாதித்தார். இந்த உலகத் தில் நன்றாக வாழவேண்டுமென்ற குறிக்கோளுடன் உழைத்தார். எப்படி எப்படி வாழலாம் என்பதை ஆராய்ந்தார். பலர், வாழும் ←aly $ பற்றிப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். நண்பர்களைப் பெறுவது எப்படி, எப்படிப் பொருள் ஈட்டுவது, எப்படிப் புகழ் சம்பாதிப்பது என்றெல்லாம் இந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் நன்றாகத் தெரிந்து ஆராய்ந்து வரவர முன்னுக்கு வந்து கொண்டிருந்தார். ஒரு கணப்பொழுதையும் வீணடிக்காமல் எப்போதும் சுறுசுறுப் பாக வேலை செய்தார். அவருடைய நிலை வரவர உயர்ந்தது. உறவினர்கள் பெருகினர்கள். நண்பர்கள் அதிகமானார்கள். சொத்தும் சேர்ந்து வந்தது. நல்ல வீட்டைக் கட்டிக் கொண்டார். பெரிய மாளிகையாக அந்த வீடு அமைந்தது. பொருள்களின் வகை மனிதர்களோடு தொடர்புடைய பொருள்களில் இரண்டு வகை உண்டு. உயிருள்ள பொருள் ஒரு வகை; உயிர் இல்லாத பொருள் ஒருவகை. உயிருள்ள பொருள்களாவன, உறவினர் களும், நண்பர்களும். உயிரில்லாத பொருள் சொத்து. சொத்து இரண்டு வகைப்படும்; அசையும் பொருள், அசையாப் பொருள் என்று சொல்வார்கள், ஸ்தாவர ஜங்கமம் என்று வடமொழியில் சொல்வர். வீடு, நிலம் முதலியன அசையாப் பொருள். ஆடை, அணி, பணம் முதலியன அசையும் பொருள். இந்த இரண்டு வகையான பொருள்களும் முன்னே சொன்ன செல்வருக்கு நாளுக்கு நாள் பெருகி வந்தன. முதலில் அவருக்கு நல்ல 296