பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாகுலம் தீர பொருள், மடந்தையர், வீடு ஆகியவற்றில் பற்று வைத்து. வேலாயுதனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவதால் பயன் இல்லை என்றும், எல்லாம் காலனுக்கு முன் விட்டு ஒழியும் என்றும் கூறிய உபதேசத்தைச் சென்ற பாட்டில் பார்த்தோம். இந்த மூன்று வகையான ஆசைகளுள்ளும் மக்களின் உள்ளத்தை மிகுதியாகப் பிணித்துப் பல வகையான சிக்கல்களுக்கு ஆளாக்கு வது மாதர் மயல், அதனைப் பலபல வகையில் நமக்கு நினைப் பூட்டுவார் அருணகிரிநாதர் இப்போது பார்க்கப் போகும் பாடலில் அதனையே எடுத்துச் சொல்கிறார். மங்கையருடைய பார்வை வலையில் சிக்கித் திண்டாடுகின்ற நிலையை இந்தப் பாட்டில் சொல்ல வருகிறார். பந்தாடும் மங்கையர் செங்கயல் பார்வையில் பட்டு உழலும் சிந்தாகுலம் என்று தொடங்குகிறார். மங்கையரைச் சொல்லும் போது, பந்தாடும் மங்கையர் என்று சிறப்பிக்கிறார். பந்தாடும் மங்கையர் பழைய காலத்தில் சின்னஞ் சிறு வயதில் ஆண்களும், பெண்களும் விளையாடுவார்கள். பெண் குழந்தைகள் தனியாக வும், ஆண் பிள்ளைகள் தனியாகவும் விளையாடுவதுண்டு; சேர்ந் தும் விளையாடுவார்கள். மங்கைப் பருவம் அடைந்த பிறகு பெண்கள் தனியாக விளையாடுவார்கள். அவர்களுக்கென்றே தனி விளையாட்டுகள் இருந்தன. வீட்டில் இருந்தபடியே விளை யாடுவார்கள்; வீட்டுக்குப் புறம்பும் சென்று விளையாடுவதுண்டு. மங்கையர் விளையாடுகின்ற ஆடல் வகைகள் அம்மானை ஆடுதல், கழங்கு ஆடுதல், பந்து ஆடுதல் முதலிய பல. முக்கிய மாகப் பந்தாடும் விளையாட்டு மங்கையர்களுக்கே உரியது. பந்து