பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அந்தப் பெருமானிடத்தில் ஒரு யானைக்கும் பற்று உண்டா யிற்று. அது தன்னுடைய இயல்புக்கு ஏற்பப் பூசை செய்யத் தொடங்கியது. காவிரி ஆற்றுக்குச் சென்று தன் துதிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தது. லிங்கத்தின் மேலே சிலந்திக் கூடு இருப்பதைப் பார்த்து அதைக் குலைத்து விட்டது. யானை போன பிறகு சிலந்தி வந்தது. தான் கட்டிய கூடு குலைந்துவிட்டதே என்ற கோபம் அதற்கு வரவில்லை. எம்பெருமான் வெயிலில் காய்கிறானே என்று மனம் இரங்கி வருந்தியது. மறுபடியும் ஒரு நாழிகையில் வலை பின்னிக் கூடு கட்டிவிட்டது. மறுநாள் அந்த யானை கூட்டைப் பார்த்து மறுபடியும் கலைத்துவிட்டது. யானை கலைப் பதும், சிலந்தி மீட்டும் கூடு கட்டுவதுமாக நடந்து வந்தது. ஒருநாள் சிலந்தி, "இதை யார் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்' என்று நினைத்தது. வலை கட்டின பிறகு அங்கே தங்கிக் கவனித்தது. அப்போது துதிக்கை நிறையத் தண்ணிரை முகந்து வந்து யானை அபிஷேகம் செய்தது. சிலந்திக் கூட்டை யும் துதிக்கையினாலே குலைத்தது. அந்தச் சமயம் பார்த்துச் சிலந்தி யானையின் துதிக்கையினுள் புகுந்து குடைய ஆரம்பித் தது. யானையோ வலி தாங்க முடியாமல் துதிக்கையை நீட்டித் தரையில் அறைந்தது. அதனால் சிலந்தியும் இறந்து போயிற்று; யானையும் இறந்துவிட்டது. அந்த யானை சிவ கணங்களில் ஒரு வராக ஆகிவிட்டது. சிலந்தி என்ன பதவி பெற்றது தெரியுமா? பெரிய அரசனாகப் பிறந்தது. கோச்செங்கட் சோழன் சோழச் சக்கரவர்த்திகளுக்குள் கோச்செங்கட்சோழன் என்று ஒர் அரசன் இருந்தான். அவனை, திருவானைக்காவில் ஆண்ட வனை வழிபட்ட சிலந்தியின் மறுபிறவி என்று சொல்வார்கள். ‘சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழற் பந்தர் செய்து உலந்தவன் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக் கலந்தநீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே' என்று அப்பர் சுவாமிகள் இந்த வரலாற்றைக் குறிக்கிறார். 34