பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை மண்டலம் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக் கண்டுருண்டண்டர்விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே. என்பது பாட்டு. இதைப் பாடிப் பார்த்தால் இதன் சந்தநயம் நன்கு புலனாகும். அடுத்த பாட்டு முருகப் பெருமானது இளமை விளை யாட்டை நினைந்து பாடியது. அவனது திருவரையில் அணிந்த கிண்கிணி யோசையின் வலிமையைக் கூற வந்தவர், அது நன்கு தெளிவாகும் பொருட்டுக் கண்ணன் முழக்கிய வலம்புரி யோசையோடு ஒப்புநோக்கும்படி வைத்துக் காட்டுகிறார். ஆறாவது பாட்டில் அள்ளி மணாளனை நினைப்பூட்டிக் கொண்டு காமத்தை வெல்ல வழி சொல்லுகிறார். தாயை நினைந்தால் நம்முடைய உள்ளம் குழந்தைத் தன்மை பெறுகிறது. காம உணர்ச்சி காளைப் பருவத்தின் விளைவு. உடம்பால் காளையாக இருந்தாலும் உள்ளத்தால் குழந்தையாக இருக்கப் பழகலாம் அல்லவா? முருகன் வள்ளி மணவாளன். அந்த வள்ளியாகிய தாய் நாம் இருக்கும் நிலவுலகில் வாழ்ந்தவள். அந்தப் பெருமாட்டியையும் அவளுடைய மணாளனாகிய முருகனையும் போற்றினால் காமத்தை வெல்லலாம் என்பதை எதிர்மறை வகையில் இந்தப் பாட்டில் சொல்கிறார். 'நெஞ்சே மோகந்தரும் பெண்களின் அங்க எழிலைக் கண்டு மயங்கு கிறாயே! வள்ளிமணவாளன் திருவடியை விரும்பிப் பக்தி பண்ணவில்லையே! என்று சொல்கிறார். - காமத்தைப் பற்றிச் சொல்லும்போது அருணகிரிநாதர் முருகனை வள்ளிமணவாளனாக நினைக்கும்படி ஒரு தந்திரத்தைச் சொல்லித் தருகிறார். இந்தத் தந்திரத்தை வெளிப்படை யாகச் சொல்லா விட்டாலும் கூர்ந்து நோக்கினால் இது புலப்படும். 'கடத்தில் குறத்தி பிரான்அரு ளால்கலங் காதசித்தத் திடத்தில் புனையென யான்கடந் தேன்சித்ர மாதரல்குல் i27