பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பனையில்உந்தித் தடத்தில் தனத்தில் கிடக்கும்.வெங் காம சமுத்திரமே” என்பது முன்னே நாம் பார்த்த பாட்டு. (19) வள்ளிநாயகிக்கு மணவாளனாக முருகனைத் தியானிப்பதில் மற்றொரு பயனும் உண்டு. அப்பெருமாட்டியை முருகன் ஆட் கொண்டது, ஆருயிர்களை அவன் வலிய வந்து தடுத்தாட் கொள்ளும் கருணைத் திறத்தைக் காட்டுவது. அந்த வரலாற்றை நினைக்கும்போது நாமும் வள்ளியின் நிலையைப் பெறவேண்டும என்ற பாவம் உண்டாக வேண்டும். பக்தர்கள் இராதாகிருஷ் ணனையும் வள்ளிநாயகனையும் பாடிப் பரவிக் கூத்தாடுவது தம்மை இறைவனுடைய நாயகிகளாக எண்ணும் பாவம் முறுக வேண்டும் என்பதற்காகத்தான். முருகனடியார்கள் வள்ளி நாயகியை முருகன் எளிவந்து ஆண்ட கருணையைப் பலபல வகையில் பாராட்டியும் பாடியும் இன்புறுவதற்குரிய காரணமும் இதுவே. நாமே வள்ளிநாயகி ஆக வேண்டும். உள்ளத்தாற் பெண்மையை மேற்கொள்ள வேண்டும். இப்படித் தியானம் பண்ணப் பெருந்தவம் செய்திருக்க வேண்டுமாம். 'காளைக் குமரேசனெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய்தியவா பாளைக் குழல்வள்ளிபதம் பணியும் வேளைச் சுரபூ பதிமே ருவையே” என்று கந்தர் அநுபூதியில் அருணகிரியார் பாடுகிறார். முருகனை வள்ளிமணாளனாகத் தியானித்துப் பழகினால் நாமும் பதியாகிய அவனை அடையும் காதலி நிலையில் இருக்கிறோம் என்ற நினைவு நம் உள்ளத்தில் படியும். அப்போது நாம் ஆண் என்ற எண்ணமும் அதன் விளைவாகிய காமமும் சுருங்கும். பெண் பெண்ணைப் பார்த்துக் காமம் கொள்வது இயல்பாகாது. ஆதலின் நாம் குமரநாயகனை அடைய வேண்டும் என்ற காதலை வளர்த்துக் கொண்டால் காமம் தோன்றாது. வள்ளிமணவாளனாக முருகனை வணங்குவதனால் வரும் பயன் இது. இது கருதியே, "தோதகச் சொல்லை நல்ல வெள்ளிய நித்தில 128