பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு விலங்கு பெற்றவர்களுக்குப் பிரமனால் உண்டாகிற பிறப்புத் துன்பம் கிடையாது என்கிற உண்மையை அவனுடைய திருக்கரத்தைக் காண்கிறவர்கள் தெரிந்து கொள்வார்கள். இறைவன் திருவடி யமனை உதைத்தது. மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்கு யமனைத் தன் திருக்காலால் உதைத்து ஒழித்தவன் சிவபெருமான். அந்தக் கதையை நாம் கேட்டிருக்கிறோம். மார்க்கண்டேயனுக்கு மாத்திரம் நிகழ்வது அன்று அது. தன்னை உறுதியாக நம்பினவர் கள் அனைவருக்கும் அருள் செய்யும் திருவடி அது. ஆகவே, சிவபிரான் திருவடியால் கால பயத்தையும் திருக்கரத்தால் பிரமனால் விளையும் அச்சத்தையும் போக்குகிறவன் என்பதை நாம் உணரலாம். வகுப்பவன் முருகப்பெருமான் சிவபெருமானினும் வேறு அல்லாதவன். ஆகவே சிவபெருமானுக்குரிய இயல்புகள் அவனுக்கும் உரியன. முருகனும் இறப்புத் துன்பத்தையும் பிறப்புத் துன்பத்தையும் போக்குகிறவன். பலவிடங்களில் யமனைத் தைரியத்தோடு அறை கூவுகிறார் அருணகிரியார். முருகன் பிரமனைக் குட்டினான் என்பது கந்தபுராண வரலாறு. அது முருகப்பெருமான் பிறவித் துன்பத்தை நீக்குபவன் என்ற குறிப்பைத் தருகிற கதை. பிரமன் அவரவர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ற வகையில் பிறப்பைத் தருகிறவன். வினையே பிறப்பையும், இறப்பையும் தருவதற்குக் காரணமானாலும் அது ஜடமாதலின் அதுவே இயங்காது. பாங்கில் பணம் இருக்கிறது. அதனை அங்கே பலர் போட்டு வைத்திருக்கிறார்கள். வேண்டியபொழுது வாங்கிக் கொள்கிறார்கள். பணத்தைப் போடுகிறவரும் வாங்குகிறவருமாகப் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பணம் தானே உரியவர்கள் கையில் சேருவது இல்லை. அதனை வாங்கவும், கொடுக்கவும் அதிகாரிகள் அங்கே இருக்கிறார்கள். பணம் ஜடமாதலின் அதுவே இயங்காது. அதுபோல் இந்த உலகத்தில் பிறந்து புண்ணிய பாவ வினைகளை ஈட்டியவர்களுக்கு அடுத்த பிறவிகளில் அவற்றால் வரும் இன்ப துன்பங்களைச் சேர்ப்பதற்குரிய ஆற்றல் அந்த வினை களுக்கு இல்லை. அவை ஜடமாதலின் அவற்றைக் கொண்டு ஆருயிர்களுக்குரிய அநுபவங்களைத் தருவதற்கு ஏதேனும் ஒரு 137