பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு விலங்கு காப்பாற்றுதல் அவன் இயல்பு ஆதலின் உடனே போரைத் தொடங்கினான். அசுரர்கள் அறுபத்தாறு கோடி பேர்களாயிற்றே என்று அவன் அஞ்சவில்லை. தேவர்களுடைய துணை வலிமையை வைத்துக்கொண்டு போரிடலாம் என்றும் எண்ணவில்லை. வேல் அவன் திருக்கரத்தில் இருக்கிறது. அதைக் கொண்டு எத்தனை பெரிய பகைவர்களாக இருந்தாலும் ஒழித்துவிடலாம். வேறு யாருடைய கையிலும் அத்தகைய வேல் இல்லை. அது ஒப்பற்ற வேல். அவன் அந்த வேலாயுதத்தை எடுத்துக்கொண்டு நடந்த போதே சூரன் மனத்திற்குள் அஞ்சினான். கிரெளஞ்சமலை திடுக் கிட்டது. சூரன் பின்னாலே புகுவதற்கு இருந்த கடலும் அலறி யது. இதை அலங்காரமாக முன்பும் ஒரு பாட்டில் சொன்னார். á á

  • * * * s கடலழக் குன்றழச் சூரழ விம்மியழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவன்என்று ஒதும் குவலயமே.” இங்கு வேறு வகையில் அதே கருத்தைச் சொல்கிறார்.

தனிவேல் எடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்ப வரும் எம்கோன். எங்களுடைய கடவுளாகிய முருகப்பெருமான் வேலை எடுத்து நடக்கிறான். அமரர்களுடைய துன்பத்தைப் போக்கவேண்டு மென்ற எண்ணத்தோடு நடைபோடுகிறான். இனிமேல்தான் போர்க் களத்திற்குச் சென்று போரிட வேண்டும். இவன் தன்னுடைய தளத்திலிருந்து நடைபோடும்போதே எதிர்த்தளத்தில் உள்ள பகைவர்களுடைய மனத்தில் அச்சம் குடிகொள்கிறது. பொங்கி வரும் கடல், ஐயோ! இந்த வேல் நம்மைச் சுவற அடிக்கும் போல் இருக்கிறதே! இந்தப் படுபாவி சூரன் நம்மிடத்தில் வந்து மறைந்துகொள்ள, அது காரணமாக நம்மை இந்தக் கூர்வேல் சுவற அடித்துவிடப் போகிறதே என்று வாய்விட்டு அலறு கிறதாம். கடல் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். முருகன் வேலைத் தாங்கி நடைபோட்டபோது அந்த ஒலி, ஐயோ! எனக்குத் தீங்கு வரப்போகிறதே என்று வாய்விட்டுப் புலம்புவது போல இருக்கிறதாம். பெரிய மலை உருவத்தில் இருந்த கிரெளஞ்சாசுரன் அந்த வேல் தன்னைப் பொடிப் பொடியாக்கப் போகின்றதே என்று புலம்புகின்றானாம். 143