பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரம் கண் பெறுவதற்கு முன்பாக நான் நைந்து உருகி இருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. உன் திருவருளைப் பெற்ற பிறகும், அந்த அருள் எளிதில் கிடைப்பதன்று என்று உணர்ந்த பிறகும், நான் உருகாமல் இருக்கிறேன். உடம்பெல்லாம் கண்ணாக, அடிமுதல் தலை வரையிலும் நெஞ்சாக இருந்து உருகிக் கண்ணிர்விட வேண்டும். அப்படி இல்லாமல் இப்போதுள்ள ஒரு நெஞ்சமும் கல்லாக இருக்கிறது. இரண்டு கண்ணும் மரமாக இருக்கின்றன” என்று புலம்புகிறார். 'வெள்ளம்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய் பள்ளம்தாழ் உறுபுனலில் கீழ்மே லாகப் பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு உள்ளந்தாள் நின்றுஉச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்புஎல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால்; நெஞ்சம் கல்ஆம்; கண்இணையும் மரம்.ஆம்தீ வினையி னேற்கே.” ஆகவே, நமக்குக் கண் இருந்தாலும், கருத்திருந்தாலும், ஆண்டவனது அழகுத் திருக்கோலம் கண்டிருந்தாலும் நம்முடைய உள்ளத்தில் பக்தி நிறைவு இருக்க வேண்டும். அது இல்லாத வரையில் ஆண்டவன் நேரே வந்து நின்றாலும் நாம் கண்ணெடுத் தும் பார்க்கமாட்டோம்; கை குவித்து நின்று உருக மாட்டோம். அருணகிரிநாதப் பெருமானுக்குத் திருச்செங்கோட்டுக்குப் போய்த் தரிசனம் செய்யும்போது உள்ளம் நன்றாகக் கெட்டித்த வெடி மருந்துக் குழாய் போல இருந்தது. திரியில் நெருப்பு வைப்பது போல அவருடைய கண்கள் அழகுத் திருக்கோலத்தைப் பார்த்தன. உடனே அவர் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது. அப்போது பாடிய பாட்டுத்தான் இது. அந்த ஆனந்தத்தில் அவர் சிறிது குறையைக் கண்டார். அது குறையன்று. அவருடைய உணர்ச்சி அந்தக் குறையைச் சொல்லும் வகையினால் புலனாகிறது. கண் போதாமை கம்பராமாயணத்தில் இப்படி ஒர் இடம் வருகிறது. சீதா, பிராட்டியின் அழகைக் கம்பர் வருணிக்கிறார். அவளைக் கண்ட 155