பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வர்கள் கண்ணை வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தார் களாம். அந்தக் காட்சிக்குக் கரை காணாமல் திணறினார்களாம். இரண்டு கண்ணுடைய மக்கள் அவளுடைய பேரழகைக் கண்ட போது, "ஐயோ, இடையிடையே கண்ணை இமைத்து அல்லவா காணவேண்டியிருக்கிறது? நமக்கு இமையா நாட்டம் இல்லையே: என்று வருந்தினார்களாம். இமையாத கண்ணைப் பெற்றவர் களாகிய தேவர்களாவது சீதையைப் பார்த்துத் திருப்தி அடைந் தார்களா? அவர்களுக்கும் ஒரு குறை இருந்தது. அவர்கள் தம்முடைய இமையா நாட்டத்தை உடைய கண்ணால் சீதையைக் கண்டார்கள் என்பது உண்மை. ஆனால், "இந்தப் பேரழகைக் காண்பதற்கு நமக்கு ஆயிரம் கண் இல்லையே! என்று ஒரு குறையைச் சொல்லிக் கொண்டார்களாம். இரண்டு வகையினரும் தம் குறையை உணரச் செய்தது அந்தப் பேரழகு. 'உமையா ளொக்கும் மங்கையர் உச்சிக் கரம்வைக்கும் கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரைகாணார் இமையா நாட்டம் பெற்றில மென்றார் இருகண்ணால் அமையா தென்றார் அந்தர வானத் தவரெல்லாம்.” அப்படியே இங்கே அருணகிரியார், நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று சொன்னார். எதற்காக நாலாயிரம் கண்கள் வேண்டும்? தாம் பார்க்கும் பொருளின் பெருமைகளை அடுக்குகிறார். 'இவ்வளவு சிறந்த பொருளைக் காண்பதற்கு எனக்கு வாய்ப்பு இருந்தது. நான் கண்டேன். ஆனால் அங்கே என்னிடத்தில இருந்த கருவி. சிறியது என்பதைக் கண்டு கொண்டு வருந்தினேன்' என்பது போலச் சொல்கிறார். சிறிய செம்பைக் கொண்டு போன கணவன் பெரிய அண்டாவைத் தன் மனைவி கொடுத்து அனுப்பாது போனாளே என்று இரங்கினானே, அது போல இருக்கிறது அல்லவா? இனி, செங்கோட்டுப் பெருமானை அவர் எப்படிச் சொல்கிறார் என்று பார்க்கலாம். மாலோன் மருகன் செங்கோடன் பேரழகு உடையவன். அவனுக்கு எத்தனையோ பெருமை இருக்கிறது. இருந்தும் எடுத்தவுடன், - 156