பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சால நன்று ஆருயிர்கள் தம்முடைய முயற்சியினால் இறைவனை அடைய வேண்டுமென்று பல வகையான சாதனங்களை மேற்கொண்டு உயர்ந்து நின்று இறைவனை அடைய வேண்டும். இதுதான் இயற்கை. ஆனால் உயிர்களை ஆள வேண்டும் என்ற கவலை முருகனுக்கு உண்டாயிற்று. தாய்ப் பூனையைப் போல அவன் பேரருளுடையவனாக இருக்கிறான். சிறந்த வள்ளல்கள் தம்மிடம் உள்ள பொருளை வாங்கிக்கொள்ள இரவலர்கள் வரவேண்டுமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். தலையில் சுமையை வைத்திருக்கும் ஒருவன் அந்தச் சுமையை இறக்கும் இடம் எங்கே என்று தேடுவது போல, தம்முடைய பொருளை இரவலர் கள் வாங்கிக் கொள்ள வேண்டுமே என்று மிக்க ஆர்வத்துடன் அவர்களை நாடி இருப்பார்கள். இரவலர்களுக்கு, நமக்குப் பணம் கொடுப்பார் யார்?' என்று கவலை இருப்பது போலவே, நல்ல வள்ளலுக்கு, நம்மிடம் வந்து வாங்குவது யார்?’ என்ற கவலை இருக்கும். முருகப்பெருமானாகிய வள்ளல் தன்னுடைய பேரருளை வள்ளி நாச்சியாருக்கு வழங்க வேண்டுமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். ஆகையால் அவளைத் திருடிச் செல்ல வேண்டுமே என்று கவலைப்பட்டான் என இந்தப் பாட்டில் கூறுகிறார். செம்மான் மகளைக் களவுகொண்டு வரும் ஆகுலவனை. ஆகுலவன் - கவலை உள்ளவன். களவும் கற்பும் வெள்ளிநாயகியை முருகன் யாரும் அறியாமல் எடுத்துச் சென்றான். தமிழில் இரண்டு வகை மணம் உண்டு. களவு, கற்பு என்று அவற்றைச் சொல்வார்கள். இவற்றைக் கைகோள் என்று கூறுவர். கைகோள்- ஒழுக்கம். பல பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்த தொடர்பு காரண மாக ஆடவனும் மகளிரும் தனியே ஒருவரை ஒருவர் காண் பார்கள். நல்ல ஊழின் தூண்டுதலால் இந்தச் சந்திப்பு நிகழும். அவர்கள் பல பிறவிகளில் காதலர்களாக இருந்தமையின் கண்ட 17 í