பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 விக்கும் சிறந்த கமுக மரங்களும், முருகப் பெருமானுக்கு உகந்த பழங்களைத் தரும் மாமரங்களும் இணைந்து பொழிலாக நிறைந்திருக்கிற திருச்செங்கோட்டில் அவன் எழுந்தருளியிருக் கிறான். அவனை வாழ்த்துவது மிகவும் நல்லது. கன்னிப்பூகமுடன் தருமா மருவு செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே. 'நாலாயிரம் கண் படைத்திலனே என்று நான் இரங்கினேனே! அப்படி இரங்கி என்ன பயன்? இருப்பதைக் கொண்டு திருப்தி யுறலாமே. கண்கள் பல இல்லாவிட்டாலும் எங்கே சென்றாலும், எல்லாக் காலத்திலும் அவன் புகழை வாழ்த்தலாமே. ஒரு வாயாக இருந்தாலும் அவன் புகழ் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் மெல்ல மெல்லச் சொல்லலாம்; நிறையச் சொல்வதற்கு ஏற்ற கருவி வாய். ஆகையால் அது இல்லையே, இது இல்லையே என்று குறைபடுவதைவிட நமக்குள்ள ஒன்றைக் கொண்டு பெரும் பயன் ஈட்டலாம் என்று சமாதானம் செய்து கொள்வாரைப் போல இந்தப் பாட்டைப் பாடுகிறார். கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவு கொண்டு வரும்ஆ குலவனைச் சேவல்கைக் கோளனை வானம்உய்யப் பொருமா வினைச்செற்ற போர்வே லனைக்கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. நயம் இந்தப் பாட்டில் ஒரு நயம் இருக்கிறது. தமிழில் சொற் களைக் கொண்டு சில வகையான நயங்களைப் புலவர்கள் காட்டு வார்கள். பொருளின் அருமைப்பாட்டைப் பொருள் நயம் என்றும், சொற்களின் அருமையைச் சொல் நயம் என்றும் சொல்வது வழக்கம். பொருளாலும் சொல்லாலும் பெரும் புலவர்கள் தம் முடைய பாடல்களின் சுவையை மிகுதியாகும்படி செய்வார்கள். இந்தப் பாட்டில் சொல் நயம் ஒன்று அமைந்திருக்கிறது. மேலாகப் பார்க்கும்போது ஒருவகையான பொருளும், உள்ளே புகுந்து பார்க்கும்போது இயல்பான பொருளும் புலப்படச் சொல்வது ஒரு வழக்கம். இங்கே சாதிப் பெயர்கள் சொல்லளவில் தோற்றும் படியாக அருணகிரியார் பாடியிருக்கிறார். இதைத் தொனி என்று 178