பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 திருமகள் மானாக வள்ளிமலையில் உலவ, திருமால் சிவமுனிவராக இருந்து தவஞ் செய்தவர் அந்த மானைக் கண்டு காமுற்று நோக்க, அதனால் அம்மான் கருவுற்று வள்ளிநாயகியை ஈன்றது. அதனால், "செம்மான் மகள் என்றார். கோள் - கொள்ளுதல். கைக்கோளனை - கையிலே கொள்ளுதலை உடையவனை. வானம் - தேவர்; ஆகுபெயர். பொருமா என்றாலும் மாவாய் நின்ற சூரன் அப்படி நிற்பதற்கு முன்பு பொருததையே குறித்தது. தரு மா - கனிகளைத் தரும் மாமரம்; தருவாகிய மாமரம் என்றும் கொள்ளலாம். வாழ்த்துகை நாவின் செயல்; அது மனிதன் பெற்ற சிறப்பான கரணமாதலின் அதன் செயல் சால நன்றாயிற்று. நன்று - நன்மை தருவது.) இது கந்தர் அலங்காரத்தில் வரும் 91-ஆம் பாட்டு. £32