பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம் றுக்கு அப்பால் கர்ப்பக்கிருகத்தை அணுகி இறைவன் திருவுரு வத்தைத் தரிசிக்க வேண்டும். கோயிலை மாத்திரம் பார்த்து இறைவன் விக்கிரகத்தைக் காணாதவன் எப்படிப் பயனை விட்டவன் ஆகிறானோ அப்படியே கோயிலுக்குள் சென்று இறைவன் திருவுருவத்தைக் கண்டு அவன் அடியைப் பாராமல் இருக்கிறவனும் ஆவான். திருவடியைக் கண்டவன்கூட முழுப் பயனைப் பெற்றவன் என்று சொல்ல முடியாது. அந்தத் திரு வடியைக் காண்பது அன்பர்களுடைய நிலையின் முதல் படி, மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க வந்தவர்கள். இறைவன் திருவடியைக் காண முந்துகிறபோதுதான் அவர்கள் அநுபவ மாகிய எல்லையில் கால் எடுத்து வைக்க முயல்கிறார்கள். திருவடியைக் காணுவதுகூட முற்றிய நிலையாகாது. கண்டு அண்ட வேண்டும். பின்பு புறக் கண்ணினாலே கண்டதை அகக் கண்ணினாலே காண வேண்டும். அதுதான் மொள்ளும் நிலை. அப்புறம் அந்த நிலையினின்றும் பின்னும் உள்ளேபோய் உயிரோடு இணைந்து அநுபவம் பெற வேண்டும். கோயிலுக்குச் சென்று இறைவனைக் கண்டு அதனால் தம்மை மறக்கின்ற இன்பம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடைந்தார் என்றும், அவர் இந்த மூன்று நிலையையும் படிப்படியாகக் கடந்து இன்புற்றார் என்றும் தெரிந்து கொண்டோம். முருகப்பெருமான் தன் திருவடியை, நமக்குத் தண்டையம் புண்டரிகமாகக் காட்டி னால் போதாது; சுத்த ஞானமாகத் தர வேண்டும். அப்படித் தந்தால்தான் முடிந்த முடிபாகிய பேரின்ப அநுபவம் நமக்கு உண்டாகும். தொண்டர்கள் காணும் புண்டரிகம், கண்டு அண்டும் தண்டையம் புண்டரிகம், கண்டு அண்டி மொள்ளும் ஞானமெனும் தண்டையம் புண்டரிகம், கண்டு அண்டி மொண்டு உண்டிருக்கும் சுத்த ஞானமெனும் தண்டையம் புண்டரிகம் என்று படிப்படி யாகச் செயலும் அநுபவமும் ஏறிவரும் வகையில் பார்க்க வேண்டும். நிறையப் பணம் வைத்த பெட்டி ஒன்று நமக்குக் கிடைக் கிறது. அந்தப் பெட்டியை வீட்டுக்குக் கொண்டு வருகிறோம். மிக அதிக விலையுள்ள விற்பிடி மாணிக்கம் ஒன்று அந்தப் பெட்டியில் இருக்கிறது என்று அதைக் கொடுத்தவர் சொல்கிறார். 195