பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலம்புரியும் கிண்கிணியும் உண்டாக்க அவர் புறப்பட்டார். நேரே சத்திய பாமையின் அந்தப்புரத்துக்குப் போய்ச் சேர்ந்தார். சத்தியபாமை முனிவரைக் கண்டு உபசாரம் செய்து, "இங்கே எழுந்தருளியது என்ன காரணம்?" என்று கேட்டாள். நாரதர், 'கண்ண பிரானுடைய தேவியர்களுக் குள் உன்னை அல்லாமல் வேறு யாரிடத்திலும் மிக்க அன்பு அவனுக்கு இல்லை என்று எண்ணினேன். உனக்கும் அப்படியே அவன் சொல்லியிருக்கிறான் என நினைக்கிறேன். ஆனால் அவன் ருக்மிணியிடந்தான் பெருங்காதலுடன் இருக்கிறான். காந்தமும், ஊசியும் கலந்தாற்போல அவர்கள் இருவரும் இணைந்து வாழ் கிறார்கள். கிடைப்பதற்கரிய பாரிசாத மலரை ருக்மிணிதேவிக்கு அவன் இன்று ஈந்திருக்கிறான்' என்றார். இவ்வாறு சொல்லி விட்டு அவர் வானுலகத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டார். சத்தியபாமை அதனைக் கேட்டு மனம் கொதித்தாள். தன் னுடைய அணிகலன்களை எல்லாம் எடுத்துக் கழற்றிக் கீழே போட்டாள். கண்ணில் நீர் வார வெறுந்தரையில் கிடந்தாள். கண்ணபிரான் அவளுடைய அந்தப்புரத்திற்கு வந்தான். அவள் நிலையை அறிந்து அவளைத் தன் இரண்டு கையாலும் எடுக்கும் போது அவள் சீறினாள். 'மகளிரை ஏமாற்றுகின்ற கள்வர் தாங்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன். தாங்கள் என்னைத் தொட வேண்டாம்' என்றாள். அதனைக் கேட்ட கண்ணன் அவளிடம் கோபத்துக்குக் காரணம் என்ன என்று கேட்டான். அவள் கூறிய வார்த்தைகளால் நாரதர் செய்த கலகம் இது என்பதை நன்கு உணர்ந்து, "உனக்கும் பாரிசாத மலரைக் கொண்டு வந்து தரு கிறேன். ருக்மிணிக்கு நாரதர் கொடுத்த பாரிசாத மலரைத்தான் தந்தேன். உன் வீட்டு முற்றத்தில் பாரிசாதத் தருவையே கொண்டு வந்து பதிக்கின்றேன், பார்' என்று சொல்லி அவளை மகிழ் வித்தான். "நாரத முனிவன் எய்தி நவின்றிடுங் கலகச் சொல்லால் நேரிழை முனியேல் வானோர் உலகினில் இலங்கி நிற்கும் பாரிசா தத்தை உன்றன் முன்றிலிற் பதிப்பேன் என்ன ஆரியன் உரைத்து மார்பில் அணைத்தனன், தேவி தன்னை." பின்பு இருவரும் மன மகிழ்ந்திருந்தார்கள். 1. ஐயங்கார் பாகவதம், பாரிசாதப்படலம், 34 2C5