பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை இராமனுடைய கண் தாமரையாகவும், அருள் நோக்கம் இறங்காத தாமரையாகவும் இருப்பதைத்தான் எடுத்துக் காட்டினான். 'புறங்காண அகங்காணப் பொதுமுகத்தின் அருணோக்கம் இறங்காத தாமரைக்கண் எம்பெருமான்' என்றான். இப்படி அகமும் புறமும் ஊடுருவிப் பார்க்கின்ற மக்கள் உலகத்தில் மிகச் சிலர். 'முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்' என்று திருமூலர் சொல்வர். தூய நோக்கும் மாய நோக்கும் அருணகிரி நாத சுவாமிகள் புறக் கண்ணால் புற அழகைப் பார்த்து மயங்குகின்ற நெஞ்சை நோக்கிச் சொல்கிறார். ஒரு பெண்ணைக் காணும்போது இரண்டுவகையாகப் பார்க்கலாம். அந்தப் பெண் எவ்வளவு அழகு உடையவளாக இருந்தாலும் அந்த அழகை இறைவன் படைப்பாகக் கொண்டு அதனைப் படைத்த பெருமானைப் பாராட்டலாம். அதனை நாம் நுகர வேண்டுமென்ற எண்ணத்தோடு நோக்குவது ஒரு வகை. முந்தியது தூய நோக்கு. பிந்தியது மாய நோக்கு. அழகைக் கண்டவுடன் அறிவுள்ள மனிதனுக்கு ஆசை எழுவது இயல்பு என்று சொல்வது தவறு. தம்முடைய மகளை அழகியாகக் காணுகின்ற தந்தையர் கள் இருக்கிறார்கள். தம்முடைய சகோதரிகள் அழகியராக இருப்பதைக் கண்டு தூய நெஞ்சத்தில் மகிழ்ச்சி அடைகிறவர் களும் இருக்கிறார்கள். அங்கே அழகைக் கண்கள் பார்க்கத்தான் பார்க்கின்றன. ஆனால் அந்தப் பார்வையில் களங்கம் இருப்ப தில்லை. அவ்வாறின்றிப் பலர் அழகைக் கண்டு அதைத் தம் முடைய காமப் பசிக்கு உணவாகக் கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறார்கள். இத்தகைய எண்ணம் படைத்த நெஞ்சை நோக்கிச் சொல்வது போல அருணகிரியார் பாடுகிறார். ஒரு பொருளை முழுமையாகப் பார்த்து அதன் வழியே தொடர்புடைய மற்றப் பொருள்களை எண்ணி உண்மையை உணர்வது ஒருவகை. யானையை முழுமையாகப் பார்த்தவர் களுக்குத்தான் அதன் மேலேயுள்ள பாகனும் தோற்றுவான். 225