பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் குளிர்ந்தது கந்தர் அலங்காரம் நூறு பாடல்களை உடையது என்று அதன் நூற்பயன் சொல்கிறது. ஆனாலும் மேலே ஆறு பாடல்கள் கந்தர் அலங்காரப் பிரதிகளில் சேர்ந்தே எழுதப்பட்டிருக்கின்றன. அந்தப் பாடல்களின் சொல்லமைப்பு, பொருள் அமைப்பு முதலிய வற்றைப் பார்த்தால் அவைகளும் அருணகிரியாரின் திருவாக்கு என்று தோன்றுகிறது. கந்தர் அலங்காரத்தோடு சேர்த்து அந்தப் பாடல்களையும் பாராயணம் பண்ணுவது தமிழ் நாட்டில் வழக்கமாக இருக்கிறது. இதுவரையில் நாம் கந்தர் அலங்காரம் நூறு பாடல்களைப் பார்த்தோம். இனிமேல், பொங்கி வழிந்து ததும்பும் ஆறு பாடல்களையும் பார்த்துவிட்டு, பிறகு கடைசியில் உள்ள நூற்பயனைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். உண்முக தரிசனம் இப்போது பார்க்கப் போகிற பாட்டு ஒரு வகையில் நமக்கு இடையறாது வழிகாட்டும் பாட்டு. இறைவனுடைய திருவருளில் ஈடுபடுகிற முயற்சி நம்மிடத்தில் இருக்க வேண்டும். எத்தனை தான் நாம் உடம்பினால் வணங்கி வாயினால் பேசினாலும், மனம் இறைவனுடைய வசம் ஆகாதவரையில் அநுபவம் என்பது துளியும் கிடைக்காது. கண் முதலிய இந்திரியங்களால் இறை வனுடைய திருத்தொண்டுகளில் ஈடுபடுவதன் பயன், நம் மனம் அவனோடு ஒன்றுபடுவதுதான். இறைவனை மனத்தில் நினைப் பதைத் தியானம் என்று சொல்வார்கள். உள்முகத்தில் தியானம் பண்ணப் பண்ண உள்ளொளி உண்டாகும். புறத்தில் லட்ச தீபம் போட்டுக் கண்டாலும் அதனால் அப்போதைக்கு ஒரு கிளுகிளுப்பு உண்டாகுமேயன்றித் தனித்துக் கண் மூடிக் கண்டால் இருட்டுத் தான் உண்டாகும். கூட்டத்தில் கூடி நின்று இறைவனைக் காணும்போது, சிறிது கண்மூடி அவன் உருவத்தை உள்ளே காணப் பயில வேண்டும். அப்பால் உள்ளத்தில் அவன் அவன் உருவத்தைத் தனித்து இருந்து காணப் பழகினால் உள்ளொளியைத்