பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் குளிர்ந்தது சிலம்பு ஊடுரவப் பொரு வடி வேலும். முருகப்பெருமான் வேலினால் அசுரர்களை மாய்த்தான். கிரெளஞ் சாசுரன் என்பவன் மலை வடிவில் இருந்தவன். அவன் சூரனுக்குப் பக்கபலமாக இருந்து தேவர்களுக்குப் பல துன்பங்களைச் செய்த வன். அசலமாக இருக்கும் மலை அன்று அது. இறகுகளைக் கொண்டு பறந்து கொண்டே இருந்தது அது. அதனால் அசலம் என்றும் பெயர் கிரெளஞ்ச கிரியைப் பொறுத்தவரையில் செல் லாது. பல இடங்களுக்குப் பறந்து சென்று அங்கங்கே திடும் எனக் கீழே வந்து படிந்து, அடியில் அகப்பட்டுக் கொண்ட மக்களை எல்லாம் நசுக்கி நாசம் செய்கின்ற கடுமையான செயலைக் கிரெளஞ்சாசுரன் செய்து வந்தான். அந்தச் சிலம்பை முருகப்பெருமான் திருக்கையில் உள்ள வடிவேல் பொடியாக்கி விட்டது. சூரபன்மா அகங்கார யமானவன். அவனுக்கு உறவாகிய கிரெளஞ்சாசுரன் மமகார மயமானவன். மலை போல நின்று எல்லா வளங்களும் தன்னுடையன என்று செருக்கு அடைவது மக்களுடைய இயல்பு. சூரனும் 'நான்' என்ற உணர்வோடு கிரெளஞ்சாசுரனைத் தனக்குக் கவசமாகக் கொண்டிருந்தான். இறைவன் முதலில் மமகாரத்தைப் போக்கிப் பின்பு அகங்காரத்தைப் போக்குவான். 'எல்லாம் அற என்னை இழந்த நலம்’ என்று கந்தர் அநுபூதியில் வந்த பாட்டுக்கு, மமகாரம் அற்று, அகங்காரம் அற்ற நிலை என்று பொருள் கொள்ள வேண்டும். சூரபன்மாவை இறைவன் முதலில் அழிக்கவில்லை. அவனோடு தொடர்புடைய படைகளையும், பின்பு அவனுடைய தம்பிமார் களையும், கிரெளஞ்சாசுரனையும் முன்னே அழித்துவிட்டு அப்பால் தனியாக நின்ற சூரனை அழித்தான். கப்பும் கிளையுமாக இருக்கும் மரம் சாலையில் நிற்கும்போது அதை வெட்டவேண்டு மானால் முதலில் கிளைகளை வெட்டிவிட்டு அப்பால் மரத்தை வெட்டுவது வழக்கம். அதுபோல் படர்ந்திருக்கும் மமகாரத்தைப் போக்கி, அது கிளைத்தற்கு மூலமான அகங்காரத்தை இறைவன் போக்குவான். இதைத்தான் அந்தச் சங்காரமுறை காட்டுகிறது. முருகன் மமகாரத்தைப் போக்குவான் என்பதை உணர்த்துவதற்கு, 369