பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் அகத்தில் உள்ள இருள் பொருள்களின் உண்மை நிலையைக் காணாமல் செய்கிறது. அந்த இருளுக்கு அறியாமை என்று பெயர். மனத்தில் தெளிவு இல்லாதபடி செய்து, எந்தப் பொருள் எப்படி இருந்தாலும் அதன் உண்மையான உருவத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல் செய்துவிடுகிறது. அறியாமையை இருள் என்று சொல்வது வழக்கு. இருட்டில் இருப்பவர்களுக்குத் தம் முன் உள்ள பொருள்களின் நிலை தெரியாதது போல அறியாமை உடையவர்களுக்குப் பொருள்களின் உண்மையான நிலை தெரியாது. புறத்தில் உள்ள இருளைப் போக்கி, பொருள்களின் வண்ணம் வடிவம் முதலியவற்றைத் தெரிந்துகொள்ளக் கருவி களாக இருப்பவை சூரியன், சந்திரன், அக்கினியாக மூன்றும். உள்ளே இருக்கிற இருளைப் போக்குவதற்கு இறைவனுடைய அருள்தான் வன்மையுடையது. மூன்று மன நிலை நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம்; அல்லது தூங்கு கிறோம். தூங்கும்போது இரண்டு நிலை நமக்கு வருகின்றன. ஒன்று சொப்பன நிலை; மற்றொன்று எல்லாவற்றையும் மறந்து தூங்கும் தூக்க நிலை. விழித்துக் கொண்டிருப்பதுதான் ஜாக்கிரம். சொப்பனம் காண்பது கனவு நிலை அல்லது சொப்பனாவதஸ்தை. நன்றாக அயர்ந்து தூங்குவது சுஷாப்தியவஸ்தை. இந்த மூன்று நிலைகளிலும் நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். நமக்குப் பகல் நேரத்தில் விழித்துக் கொண்டிருக்கத் தெரியும். இரவு நேரத் தில் தூங்கத் தெரியும். தூக்கத்தில் சொப்பனம் காணவும் தெரியும். இராத்திரி பகல் ஆகிய இரண்டுக்கும் நடுவில் சாயங்காலம் இருக்கிறது. அதுபோல் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் நடுவில் கனவு நிலை இருக்கிறது. கனவிலே காண்பது முற்றும் உண்மை அன்று. ஆனால் உண்மையாக நடந்தால் எவ்விதம் இன்ப துன்ப உணர்ச்சி உண்டாகுமோ அதுபோன்ற அநுபவத்தை அப்போதைக்குப் பெறுகிறோம். புலி வருவது போலக் கனவிலே காண்கிறோம். அதன் பயனாக உண்மையிலேயே உடம்பில் வேர்வை வருகிறது. தூக்கத்தில் குழந்தைகள் பயந்து கொண்டு சிறுநீர் விட்டுவிடுவதைப் பார்க்கிறோம். 38i