பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கொள்ள முடியும். ஒரு பெரிய சொத்தை எளிதில் பெற்றவனுக்கு இராத்திரியில் தூக்கம் வருவது இல்லை. ஆனால் அவன் மனம் மிகவும் உற்சாகத்தோடு இருக்கும். அதைப் போன்ற நிலை என்று சொல்லலாம். ஆனால் அதுகூடச் சரியான உபமானமாகாது. மன நிறைவு பெற்ற போது அதிக அலைச்சல் இல்லாத நிலையில் மனம் இருக்கும். அது போன்றது என்று சொல்லலாம். அதுகூடச் சரியான உவமையாகாது. மனம் அலையாமல், எதையும் நினை யாமல், தூக்கம் கொள்ளாமல் ஒன்றையே பற்றிக் கொள்ளும் நிலை அது. இரவு பகல் அற்ற அந்த இடத்தை நீ எனக்குக் காட்ட வேண்டுமென்று அருணகிரியார் பிரார்த்திக்கிறார். இராப்பகல் அற்ற இடம் காட்டி, துதித்தல் அந்த இடத்தை அவன் காட்டினால் போதுமா? அந்த இடத்தில் நின்று என்ன செய்ய வேண்டும்? - யான் இருந்தே துதிக்க. இரவும் பகலும் அற்ற இடத்தைக் காட்டி, நான் அந்த இடத் தில் இருந்து உன்னைத் துதிக்கும்படியாகச் செய்ய வேண்டும் என்கிறார். இறைவன் திருவருளால் கிடைக்கிற இரவும் பகலும் அற்ற இடத்தில் மயக்கம் இராது. புற எண்ணங்கள் மோதா. சகல கேவலம் கடந்த நிலை உண்டாகும். அந்த இடத்தில் நாம் நிற்க வேண்டுமானால் எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும். - பற்றுக்கோடு இராப்பகல் அற்ற இடம்காட்டி யான்இருந்தே துதிக்கக் குராப்புனை தண்டையந் தாள் அருளாய் எம்பெருமானுடைய திருவடியைப் பற்றிக் கொண்டால் இராப்பகல் அற்ற இடத்தில் நெடுநேரம் இருக்கலாம். ; முருகனுடைய பாதம் குரா மலரையும், தண்டையையும் அணிந்திருக்கிறது. குரா முருகப் பெருமானுக்குரிய மலர். தண்டை உமா தேவியார் தன் குழந்தைக்கு அணிந்த ஆபரணம். அவன் தன்னுடைய அன்னை சூட்டிய தண்டையை மாத்திரம் 336'