பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கனவுக் காட்சி மக்கோ உள்ளத்தில்கூடச் சரியானபடி காட்சி கிடைக்கிற தில்லை. உள்ளத்தில் நினைந்து பழகினால் அது கனவில் மிகத் தெளிவாகக் காணும். ஆசார்ய சுவாமிகள் ஓரிடத்தில், "ஆண்டவ னிடத்தில் பக்தி இருக்கிறதா என்பதைச் சோதித்துக் கொள்ளச் சொப்பனம் இருக்கிறது. சொப்பனத்தில் இறைவன் திருவுருவம் தோன்றினால் நம்முடைய பக்தி சிறந்தது என்று தெரிந்து கொள்ளலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள். நிறையப் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள், "எங்கே திருடன் வந்துவிடு வானோ?” என்று பகல் எல்லாம் பயந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கனவில் திருடன் வருவான். எப்போதும் நினை வில் எது மிகுதியாக இருக்கிறதோ அது கனவில் வரும். அது போலவே எது இல்ல என்ற குறையுண்டோ அதுவும் கனவில் வரும். அதிகமாகப் பழகுகின்ற பொருளும் வரும்; எது கிடைக்க வில்லை என்று நினைந்து ஏங்கி இருக்கிறோமோ அதுவும் வரும். . இந்த இரண்டு வகையினால் ஆண்டவனுடைய சொரூபத்தை நாம் கனவில் காணலாம். அடுத்தடுத்து அவன் திருக் கோயி லுக்குச் சென்று அவன் திருவுருவ தரிசனம் செய்திருக்க வேண்டும். அல்லது, "எம்பெருமானே! உன்னுடைய திருவருள் கிடைக்க வில்லையே” என்று ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவனுடைய காட்சி கனவில் தோன்றும். இவ்வாறு தோன்றுவது ஒரு வகை அநுபவம். இதை இராமலிங்க சுவாமிகள் ஒரு பாட்டில் சுட்டுகிறார்; 'பண்ணேறும் மொழிஅடியார் பரவி ஏத்தும் பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கின் கண்ணேறு படும்என்றோ கனவி லேனும் காட்டென்றால் காட்டுகிலாய்; கருணை ஈதோ!' இதில் இராமலிங்க சுவாமிகள், ஏங்கினால் கனவில் காணலாம் என்ற உண்மையைப் புலப்படுத்துகிறார். நன்றாகக் கண்டு, நன்றாக உள்ளத்தில் வைத்துக் கனவிலும் கண்டு, பின்பு நினைக் கும்போது அதனைப் புறத்திலும் கண்டு ஆனந்தம் அடைவது சிறந்த பக்தர்களுடைய இயற்கை. மூன்றாவது நிலைதான் புறக் காட்சி. அதை இந்தப் பாட்டில் சொல்கிறார் அருணகிரியார். 4CO