பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பய பக்தி பக்தியும் உண்டாக வேண்டும். அப்படி உண்டான பக்திதான் பயபக்தி என்று சொல்லப் பெறுவது. அருணகிரியார் வேளைக் காரன் வகுப்பில், 'ஆனபய பக்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் பக்தசன வாரக்காரனும்' என்று பக்தர்களைப் பற்றிச் சொல்லும்போது பயபக்தி என்ற தொடரை ஆள்கிறார். 'மரணம் வந்துவிடுமே என்று பயந்து பக்தி செய்யும் நிலை மிகச் சிறந்தது. அப்போதுதான் அந்தப் பக்தி ஆழ்ந்து முறுகிய தாக இருக்கும். நாம் இறைவனிடத்தில் ஓரளவு பக்தி பண்ணு கிறோம். ஆனால் பயபக்தி செய்வதில்லை. மரணத்தில் நாம் உண்மையான பயத்தைக் கொள்ளவில்லை. அறிவும் உணர்வும் மரணம் துன்பமுடையது என்பதை நாம் அறிவோம். ஆனால் எவ்வாறு உணர வேண்டுமோ அப்படி உணருவது இல்லை. அமெரிக்க நாட்டில் நூறு வீடுகள் எரிந்து விட்டன என்று பத்திரிகையில் பார்க்கிறோம். அந்தச் செய்தி ஒரு கண நேரம் இரக்கத்தை உண்டாக்கினாலும் பின்பு வெறும் செய்தி அளவாக முடிகிறது. ஆனால் அடுத்த வீட்டில் தீப் பிடித்துக் கொண்டுவிட்டது என்று ஒருவன் சொன்னால் நாம் அதைச் செய்தியாகக் கேட்டு நின்றுவிடுவதில்லை. உடனே பரபரப்பு அடைந்து, 'நம் வீட்டுக்கும் அது வந்துவிடுமே!’ என்று அஞ்சி நெருப்பை அணைப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்ய ஒடுவோம். அதுதான் உண்மையான பயம், மரணத்தைப் பற்றிய செய்தி நமக்குத் தெரியும். ஆனால் அது நம்முடைய குலையில் ஊடுருவி அச்சத்தை உண்டாக்கவில்லை. ஒரு மனிதன் ஒர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்குப் பார வண்டியை ஏற்றிச் செல்கிறான். அதனால் வரும் கூலியினால் பிழைத்துக் கொண்டிருக்கிறான். அவன் வாரத்திற்கு ஒரு முறை தன்னுடைய மாடுகளைக் குளிப்பாட்டச் செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் மாடுகளை ஒட்டிக் கொண்டு தண்ணீர்த் துறைக்குப் போய்க் கொண்டிருக்கிறான். அப்போது பல ஆண்டு களாகப் பாராமல் இருந்த மைத்துனன் அக்கரைச் சீமையிலிருந்து 411