பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பய பக்தி அவனுக்கு அடுத்த கணத்தில் தண்ணிர் வேண்டும். அதுபோல் இறைவனிடத்தில் பக்தி உண்மையாக முறுக வேண்டுமானால் மரண பயம், தீப் பிடித்தவனுக்கு உண்டான உணர்ச்சியைப் போல இருக்க வேண்டும். உள்ளீரலில் அந்தப் பயம் பற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்தக் கணத்திலேயே இதற்கு மாற்றுத் தேட வேண்டுமென்ற ஆர்வமும், வேகமும் உண்டாகும். நாமோ அப்படிக் கவலைப்படுவதில்லை. மரண பயத்தைப் போக்கும் வழியை நாடுவதில்லை. மாட்டு வண்டிக் காரனைப் போலவும் மற்றவர்களைப் போலவும் இருக்கிறோம். என்று வருமோ? ாம் எவ்வளவு காரியங்களை மேற்போட்டுக் கொண்டிருக் கிறோம். அவற்றை எல்லாம் ஒருவிதமாகக் குறிப்பிட்ட காலத் தில் நிகழும்படி செய்யலாம். ஆனால் மரணம் என்பது எந்த நேரத்தில் நமக்கு வருமோ தெரியாது. யமனுடைய வாய் திறந்து கொண்டிருக்கிறது. எப்போது அதை மூடிப் பல்லால் உயிரைக் கடித்துத் துன்புறுத்துவானோ, தெரியாது. 'யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்’ என்பர் ஞானசம்பந்தர். எந்தக் கணமும் நாம் இறந்து போகலாம். ஆகையால் ஒவ்வொரு கணமும் மரணத்தின் வாயிலில் இருப்ப தாக எண்ணி உணர்ந்து உண்மையான அச்சத்தை அடைய வேண் டும். அச்சத்தைப் போக்கும் பெருமான் முருகன். அவனுடைய திருவருளினால் மரண பயம் போகும் என்பதை நன்றாகத் தெளிந்து அவனை நம்பி அவன்பால் அன்பு செய்ய வேண்டும். இப்படி அன்பு கொண்டு அது முறுகினால் சிறந்த பக்தியாகும். இதையே அருணகிரியார் சொல்ல வருகிறார். - 'எம்பெருமானே, எத்தனையோ பேர் கோயிலுக்குச் சென்று உன்னைத் தொழுகிறார்கள். அவர்களில் பல வகையினர் இருக் கிறார்கள். பரம்பரையாக வந்த பழக்கம் என்று கருதிக் கோயி லுக்குப் போய் உன்னைத் தொழுவார் சிலர். கோயிலில் கிடைக் கும் பிரசாதம் முதலியவற்றை எண்ணித் தொழுபவர் சிலர். பிறர் செய்யும் நிர்ப்பந்தத்தினால் சென்று கோயிலில் தொழுவார் சிலர். இப்படி உன் அருள் நிறைந்த பாதங்களைக் கும்பிடுகிறவர்கள் பல வகையாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உண்மையாக 413