பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வள்ளியெம்பெருமாட்டியை மணந்து கொண்ட இடம் இந்தத் திருத்தணி மாமலை. மணத்திற்கு ஏற்ற வளமுடைய மலை அது. தேவர்களுக்குச் சிகாமணியாக இருக்கிற பெருமான், தேவலோகத் தில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டாலும் அதைவிடச் சிறந்த கல்யாணம் ஒன்றைத் திருத்தணிகையில் பண்ணிக் கொண் டான். அது அவன் பெரும் கருணையைக் காட்டுகிறது. "தேவர் களுக்கு எல்லாம் சிகாமணியாக இருக்கிறவனே, திருத்தணி மாமலையில் வாழும் சேவற் கொடி உடையானே, இந்த உயிருக்கு மோசம் வருமே, மரணம் வந்துவிடுமே என்று பயந்து, அது காரணமாக உன் திருவடிகளைச் சேவிக்கின்ற நினைப்பு இல்லாமல் இருக்கிறேனே! முன்னைப் பிறவியில் செய்த பாவந்தான் நான் இப்படி இருப்பதற்குக் காரணம். அந்தப் பாவத்தை நீ தீர்த்து அருள வேண்டும்' என்று இந்தப் பாட்டில் நமக்காக அருணகிரியார் வேண்டிக் கொள்கிறார். ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்துஉன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்; வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ் சேவல் கொடிஉடை யானே, அமரர் சிகாமணியே! (உயிருக்கு நஷ்டம் வரும் வண்ணத்தை உணர்ந்து உன் அருள் வடிவான திருவடியைப் பணிய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை; இதற்குக் காரணமான பாவத்தைப் போக்கி அருள்புரிவாய்; பொய்கை யோடு சேர்ந்த விசாலமான வயல்கள் சுற்றியுள்ள திருத்தணிகையென்னும் பெருமையையுடைய மலையில் வாழும், சேவற் கொடியை உடைய பெருமானே, தேவர்களுக்குச் சிகாமணி போன்றவனே! வருமாறு - வரும் ஆற்றை. சேவிக்க என்று - நான் சேவிப்பேனாக என்று; சேவிக்க: வியங்கோள். வினை - பாவம். வாவித் தடவயல் - வாவியோடு கூடிய தடவயல். சிகாமணி - முடியின் மேல் அணியும் மணி; என்றது சென்னியால் வந்திக்கும் உயர்வுடையாய் என்றபடி..! மரணத்திலே பயமும் அது காரணமாக அதைப் போக்கிக் கொள்ள முருகனிடத்தில் ஆழ்ந்த பக்தியும் உண்டாக வேண்டும் என்பது கருத்து. 4.18