பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்த்துணை பெற்றார். ஏதாவது ஒரு விஷயத்தில் அவர் சம்பந்தப்பட்டால் அவர் தம்முடைய உச்சுவாச நிச்சுவாசத்தை நிதானமாகக் கவனிப்பார். ஒவ்வொரு தடவையும் வெளியில் மூச்சு விடும் போது கெடுதலான பகுதிகளை வெளியே தள்ளிவிடுவதாகப் பாவனை செய்வார்; அப்படியே நல்லவற்றை உள்ளே இழுத்துக் கொள்வதாக எண்ணுவார். நான் சங்கோசத்தை வெளியே தள்ளி விடுகிறேன்; நம்பிக்கையை உள்ளே வாங்குகிறேன் என்று சொல்லிக் கொள்வார்; பயங்கொள்ளித் தனத்தைத் தள்ளி விடு கிறேன்; உறுதியை உள்வாங்குகிறேன். தோல்வியைத் தொலைத்து விடுகிறேன்; வெற்றியை உட்கொள்கிறேன்' என்று தாமே சொல்லிக் கொள்வார். 'அவர் உள் இழுத்ததும் வெளியில் விட்டதும் வெறும் மூச்சுக் காற்றுத்தான். ஆனால் அவருடைய அடிமனம், மேல் மனம் எண்ணிய இந்த எண்ணங்களை ஏற்றுக் கொண்டு அவர் விரும்பிய பண்புகளை மலரச் செய்தது' என்று எழுதுகிறார். நம்முடைய பெரியவர்கள் நமக்கு உறுதிப்பாடு உண்டா வதற்காகப் பாடிய பாடல்கள் இத்தகைய பயிற்சியைச் செய்ய உதவுகின்றன. இந்தக் காலத்து மன விஞ்ஞானிகள் மனத்தின் இயல்புகளை எவ்வளவு நுட்பமாகத் தெரிந்து கொண்டிருக் கிறார்களோ அதைவிட நுட்பமாகத் அநுபூதிமான்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் உண்மைகளைப் புதிது புதிதாகக் கண்டுபிடித்துச் சொல்லும்போது, நம் முன்னோர்கள் கூறிய கருத்துக்களுக்கு அவை விளக்கங்களாக இருப்பதைக் காண்கிறோம். காலன் கந்தர் அலங்காரத்தில் நூறு பாடல்கள் அமைந்த பெரு மாலைக்குக் குஞ்சம் போல ஆறு பாடல்கள் இருப்பதைப் பார்த் தோம். அந்த ஆறு பாடல்களில் கடைசிப் பாடலை இப்போது பார்க்கப் போகிறோம். நம்முடைய வாழ்வின் கடைசிக்குப் பயன்படும் பாடலாகவும் அது இருக்கிறது. யம பயத்தைப் போக்குவதற்கு அமைந்த அற்புதமான பாட்டு அது. முருகப் பெருமானுடைய திருவருள் துணை நமக்கு இருக்கும்போது யமனுக்கு ஏன் அஞ்ச வேண்டுமென்ற உணர்ச்சியைத் தருவது க.சொ.VI-28 43了