பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 குணங்கள் எல்லாம் தாமே வந்து அமைந்தன. அகிம்சையை மேற்கொண்ட காந்தியடிகளுக்கு மற்றக் குணங்கள் எல்லாம் நிரம்பி இருந்தன. s 'கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்’ என்று தாயுமானவர் சொல்கிறார். அருணகிரிநாதப் பெருமான் உலகத்தார் உய்யும்பொருட்டுப் பாடிய கந்தர் அலங்காரத்தில் ஒவ்வொரு பாட்டும் சிறந்த கருத்தைக் கொண்டது. மனிதர் களுடைய குற்றங்களை எடுத்துச் சொல்லி, இன்ன வகையில் அவற்றினின்றும் நீங்கி வாழ வேண்டுமென்பதைப் பல பாடல் கள் சொல்கின்றன. முருகப்பெருமானுடைய பெருமையைக் காட்டி அவனுடைய கருணைக்கு ஆளாகவேண்டுமென்ற எண்ணம் உண்டாகும்படி சில பாடல்கள் சொல்கின்றன. எந்தப் பாட்டைப் படித்தாலும் அந்தப் பாட்டில் நடுமணியாக ஒரு கருத்து இருப் பதைக் காணலாம். அந்தக் கருத்தையே நம்முடைய வாழ்நாளில் குறிக்கோளாகக் கொண்டு ஒழுகி வந்தோமானால் அது காரண மாக மற்றப் பண்புகளும் தாமே வந்து அமையும். ஆகையால் ஒன்று கற்றாலும் நன்கு கற்க வேண்டுமென்ற கருத்தோடு இப்படிச் சொல்கிறார். - ஒரு கவி கற்றாலே போதும், மற்றவை வேண்டாம் என்பது இதன் பொருள் அல்ல. மிகப் பசித்தவன் தனக்குச் சோறு வேண்டுமென்று கேட்கிறான். "ஐயோ, ஒரு கவளம் தாருங்கள்' என்று சொல்கிறான். அளவு குறிப்பிட்டு அவன் சொன்னாலும் ஒரு கவளம் மட்டும் போதும் என்பது அவன் கருத்து அன்று. வயிறு நிறையச் சோறு போடுகிறேன் என்றால் அவன் மறுப் பானா? அப்படி ஒரு பாட்டுக்கே இத்தனை பயன் இருக்கும் போது நூறு பாடல்களையும் படிக்கிறவர்கள் பெரும் பயன் அடைவார்கள் என்பது சொல்லாமலே விளங்கும். முடிந்த பயன் அந்தப் பெரும் பயன் என்ன? இந்தப் பாடலில் இம்மை வாழ்வில் குறைகள் நீங்கும் என்றும், எம பயம் நீங்கும் என்றும், மறுமை வாழ்வில் நரகம் அணுகாது என்றும் சொன்னார். ஆனால், அதற்கு மேற்பட்ட பெரும் பயனும் ஒன்று உண்டு. அதுதான் வீடு அடைதல். இந்தப் பாட்டில் அந்தப் பயனைச் சொல்லவில்லை. 454.