பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்று எழுதியிருக்கிறாள். அந்தப் பெண்மணியின் பெயர் கேட் sivi 5$ (Kate Smith). இப்படிப் பலருடைய அநுபவங்களை அந்தப் புத்தகத்தில் பார்க்கலாம். நம்முடைய நாட்டில்தான் இறைவனிடம் நம்பிக்கை வைத்து அதனால் பல நலன்களைப் பெறுகிறார்கள் பக்தர்கள் என்றும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இறைவனுக்கு இந்த நிலந்தான் சொந்தம் என்பதும் இல்லை. எந்த இடத்தில், எந்தக் காலத்தில் அவனை நினைத்தாலும், நம்பினாலும் அப்படி நினைப்பவர்களுக்கு அவன் அருள் செய்யக் காத்திருக்கிறான். இந்த அருமையான உண்மையை அந்தப் புத்தகத்தைப் படித்த போது நான் உணர்ந்து கொண்டேன். ஆகையால் நாம் இறை வனிடம் ஆராத காதலும், ஆழ்ந்த நம்பிக்கையும் வைத்தால், நிச்சயமாக மற்றவர்களால் கிடைக்கும் நன்மையைக் காட்டிலும் அவனாலே பல பெரிய நன்மைகள் கிடைக்கும். உறுதியான நம்பிக்கை நாம் இறைவனிடம் வைக்கிற நம்பிக்கை உறுதியாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். பிறர் கண்டு நம்மைப் பக்தர்கள் என்று சொல்வதற்காக மாத்திரம் நம்பிக்கை உள்ளவர் களைப் போல நடித்தால் ஆண்டவன் நம் உள்ளே நின்று சிரிப்பான். அப்பர் சுவாமிகள் அதை ஒரு பாட்டில் சொல்கிறார். "நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவும்நீ ரும்கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே.' 2 கைமேல் பலன் அருணகிரியார், முருகப்பெருமானை வாழ்த்தி உண்மை யான நம்பிக்கையோடு இருந்தால் பயன் கைமேல் கிடைக்கும் என்று சொல்கிறார். மறுமை வாழ்விலே அவனுடைய திருவரு ளால் பேரின்பம் கிடைக்கும் என்பது மாத்திரம் அன்று; இம்மை 52