பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீ தாமதிக்காதே!

தேரோட்டம் முடிந்தபிறகு
திருவிழாக் காணவரும்
ஒரு பக்தனைப் போல்

வண்டி போன பிறகு
நிலையம் வந்து சேரும்
ஒரு பயணியைப் போல்

நோயாளி மடிந்த பிறகு
மருந்து வாங்கி வரும்
ஒரு சொந்தக்காரனைப் போல் -

நீ காலங்கழித்து வராதே;
பிறகு வருந்தாதே!

 

74

 

108