இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீ தாமதிக்காதே!
தேரோட்டம் முடிந்தபிறகு
திருவிழாக் காணவரும்
ஒரு பக்தனைப் போல்
வண்டி போன பிறகு
நிலையம் வந்து சேரும்
ஒரு பயணியைப் போல்
நோயாளி மடிந்த பிறகு
மருந்து வாங்கி வரும்
ஒரு சொந்தக்காரனைப் போல் -
நீ காலங்கழித்து வராதே;
பிறகு வருந்தாதே!
74
108